சூப்பர் ஸ்டார் Rajinikanth’க்கு தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும் என்கிற ஆசை நீண்டகாலமாகவே இருக்கிறது. இதற்காக பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களிடம் பேசி, அவரிடம் தன்னுடைய ஆரம்பகாலம் தொட்டு பல விஷயங்களைச் சொல்லி வந்தார் ரஜினி. இந்த புத்தகம் எழுதுவதற்காக ரஜினியும், எஸ்.ராமகிருஷ்ணனும் ஒன்றாகப் பல மாதங்களாக பயணித்தனர். ஆனால், இடையில் இந்தப்புத்தகம் எழுதும் பணி ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அப்படியே நின்றுபோனது.
இப்போது புத்தகமாக மட்டும் இல்லாமல் அதை பயோபிக்காகவே கொண்டுவரலாம் என ஐடியாவர, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைக் கொண்டு ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதி முடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
ரஜினிகாந்த்துடன் நீண்டகாலம் பயணித்தவர் என்பதால் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பயோபிக்குக்கான ஆரம்பகட்ட பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இயக்குநராக கே.எஸ்.ரவிக்குமார் இருக்கமாட்டார் என்கிறார்கள்.
இப்போது ரஜினி பயோபிக்கில் சூப்பர் ஸ்டாராக யார் நடிக்கப்போவது யார் என்பதுதான் பெரிய கேள்வி. தனுஷ், சிவகார்த்திகேயேன என இருபெயர்கள்தான் முன்னால் வந்து நின்றிருக்கிறது. ஆனால், தனுஷ் தன்னுடைய மகளை விவாகரத்து செய்துவிட்டதால் ரஜினி தனுஷுக்கு ஓகே சொல்லமாட்டார் என்பதால் சிவகார்த்திகேயனிடம் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.