கேப்டன் விஜயகாந்த் அவர்களை தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே இல்லை. அவர் அரசியலுக்குள் முழுமையாக கவனம் செலுத்திய பின் அவரின் சினிமா பயணத்தை தொடர தன்னுடைய மகன் சண்முக பாண்டியனை நடிக்க வைத்தார். விஜய்க்ந்த் உடைய மகன் நடிக்க வரும் செய்தி பெரிதாக பேசப்பட்டது. அவர் நடித்த படங்கள் பின்வருவன.
சகாப்தம் (2015)
கல்லூரி படிக்கும்போதே நடிப்பில் ஆர்வம் ஏற்ப்பட்டுள்ளதால் தன்னுடைய முதல் படத்துக்கான வேலையை தொடங்கினார் சண்முக பாண்டியன். தன் மகனின் முதல் படம் ஹிட்டாக வேண்டும் என்ற எண்ணத்தில் தெலுங்கு பட ரீமேக் கதையை எடுக்கலாம் என்றெல்லாம் எண்ணிய நடிகர் விஜய்காந்த், கடைசியில் புது கதையில் அறிமுகப்படுத்தினார்.
சின்ன கிராமத்தில் இருந்து மலேசியாவிற்கு சென்று அங்கு ஒரு டிடெக்டிவாக மாறி தொலைந்து போன ஒரு பெண்ணின் கணவனை தேடுகிறார். இந்த படம் பெரிதாக ஓடவில்லை, மேலும் படத்தின் இயக்குனர், நடிகர்கள் மற்றும் கதை நன்றாக அமையவூல்லை என்ற கருத்துக்களும் பரிமாறப்பட்டது.
மதுரை வீரன் (2018)
பி. ஜி. முத்தையா, தமிழ் படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்து இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சண்முக பாண்டியன், சமுத்திரக்கனி, மையம் கோபி, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். மலேசியாவில் இருந்து சொந்த ஊர் மதுரைக்கு திரும்பும் கதாநாயகன் சண்முக பாண்டியன், தன் தந்தையை கொன்றவர்களை பழி தீர்த்து, ஜல்லிக்கட்டு பந்தயத்தை மீட்டு எடுக்கும் எண்ணத்தை நிறைவெற்றுவாரா என்பது கதை.
2019ல் ‘மித்ரன்’ என்ற படத்தில் போலிஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வந்தது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தெரியாத காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை. 2016ல் விஜய்காந்த் உடன் ‘தமிழன் என்று சொல்’ படம் உருவாகும் என சொல்லப்பட்ட நிலையில் நடிகர் விஜய்காந்தின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாலும் தேர்தல் நெருங்கியதாலும் படம் கைவிடப்பட்டது.
2024 மார்ச் மாதம் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் ‘படைத் தலைவன்’ படம் உருவாகிறது என்ற தகவல் வந்தது. இதுவே கடைசியாக கிடைத்த தகவல்.