தமிழ் திரை துறையில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் ச. பிரேம்குமார். தற்போது நடிகர் கார்த்தி, அரவிந்த் சுவாமி, ராஜ் கிரண், ஸ்ரீ திவ்யா நடிப்பில் ‘மெய்யழகன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பற்றி சமீபத்தில் பேசியவர், அவரின் அடுத்த படங்கள் பற்றியும் பரிமாறினார்.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ல் வெளியான படம் ‘96‘. பிரேம்குமார் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வெற்றிபெற்றது. காதல் கதையை பல மொழிகளில் இயக்கம் அளவுக்கு இந்தியா முழுவதும் பேசப்பட்ட இப்படத்துக்கு இரண்டாம் பாகம் உருவாகிறது என்ற தகவலை கூறியுள்ளார் இயக்குனர் பிரேம்குமார்.
மெய்யழகன் படம் வெளியான பின்னர் இயக்குனர் பிரேம்குமார் ’96’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதியுள்ளதாக கூறினார். இந்த கதையை தான் மிகவும் பிடித்து, ரசித்து எழுதியுள்ளதாகவும் ஆனால் இன்னும் படத்துக்கான கதையாக மாற்றி யாரிடமும் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். படத்தின் கதையை நடிகர் விஜய் சேதுபதிக்கோ நடிகை த்ரிஷாவிடமோ கூறவில்லை என்றும் கூறினார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானால், நிச்சயமாக ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்று சென்று பார்ப்பார்கள். இந்த கதை முடிந்த இடத்திலி தொடங்குமா அல்லது புது கதையாக அமையுமா என பல கேள்விகள் இப்போதே இணையத்தில் உரையாடப்பட்டு வருகிறது.