Home Cinema News ஜெயம் ரவியுடனான விவாகரத்தில் சம்மதமில்லை. பேச தயாராக இருக்கும் Aarti Ravi.

ஜெயம் ரவியுடனான விவாகரத்தில் சம்மதமில்லை. பேச தயாராக இருக்கும் Aarti Ravi.

விவாகரத்து முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை. ஜெயம் ரவியுடன் தனிப்பட்ட முறையில் பேச தயாராக இருப்பதாகவும், அதற்கான இன்றுவரை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக Aarti Ravi கூறியுள்ளார்.

by Sudhakaran Eswaran

விவாகரத்து முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை. ஜெயம் ரவியுடன் தனிப்பட்ட முறையில் பேச தயாராக இருப்பதாகவும், அதற்கான இன்றுவரை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக Aarti Ravi கூறியுள்ளார்.  

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி Aarti Ravi -ஐ பிரிந்து வாழ்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரிய பட வைத்தார். அறிக்கை வெளியிட்டவுடன் அவரது மனைவி Aarti Ravi இந்த விவாகரத்து அவரது தனிப்பட்ட முடிவு என்றும் இதை பற்றி என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். 

aarti ravi
Source: Instagram (aarti ravi)

ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவை அவர் தன்னிச்சையாக எடுத்துள்ளதாகவும், என் ஒப்புதல் இல்லாமல் அவரின் சொந்த விருப்பத்தில் எடுக்கப்பட்டது என ஆர்த்தி பதில்  கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி, ஆர்த்திக்கு இதற்க்கு முன்பே இரண்டு முறை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், விவாகரத்து பற்றிய தகவல் எனக்கு தெரியாது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜெயம் ரவி கூறியிருந்தார். 

இதற்கிடையே ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிஸிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சமூகவலைத்தளத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் இதற்க்கு மறுப்பு தெரிவித்திருந்தார் ஜெயம் ரவி. மேலும் ஜெயம் ரவி சமீபத்தில் தனது சிறு சிறு செலவிற்கு கூட ஆர்த்தியை கேட்டு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும், இதனால் சுதந்திரமாக என்னால் இருக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார். 

தற்போது ஆர்த்தி இந்த விவாகரத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டுள்ளார். விவாகரத்து தொடர்பாக பல சர்ச்சை பேச்சுக்கள் பேசப்பட்டு வந்த நிலையில் ஆர்த்தி இந்த அறிக்கையை கூறியுள்ளார். 

aarti ravi about jayam ravi divorce
Source: Instagram (aarti ravi)

அதில், ‛‛எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் பேசப்பட்டு வரும் கருத்துக்களை பார்த்து நான் அமைதியாக இருப்பது எனது பலவீனம் மற்றும் குற்ற உணர்வினால் அல்ல. தெளிவாக சொல்வது என்றால் நான் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. 

அது அவர் எடுத்த தனிப்பட்ட முடிவு தான். அவரின் முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது. இப்பவும் நான் அவருடன் தனிப்பட்ட முறையில் பேச தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போது வரை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது.

திருமண பந்தத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இது பற்றி பொதுவெளியில் பேசி யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்தின் நலமே எனக்கு முக்கியம்” என்று கூறியிருந்தார். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.