Home Cinema News ராயபுரத்தை காக்கும் காத்தவராயனாக தனுஷ்… ‘ராயன்’ படத்தின் ஸ்பெஷல் என்ன?

ராயபுரத்தை காக்கும் காத்தவராயனாக தனுஷ்… ‘ராயன்’ படத்தின் ஸ்பெஷல் என்ன?

ராயன் படத்தின் ஸ்பெஷல், தனுஷ் நடிக்கும் இத்திரப்படம் சென்னை ராயபுரத்தில் ஒரு ஹவுஸிங் போர்ட்டில் வசிக்கும் அண்ணன் தம்பிகளைப் பற்றிய கதை.

by Santhiya Lakshmi

நடிகர் தனுஷ் இயக்கத்தில் விரைவில் வெளிவரப்போகும் படம் ‘ராயன்’. ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி முடித்ததும் ஒரு பீரியட் படத்தை இயக்க திட்டமிட்டு தேணாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை தொடங்கினார் தனுஷ். கிச்சா சுதீப்பும் இதில் தனுஷுடன் இணைந்து நடித்தார். ஆனால், ‘மெர்சல்’ படத்துக்குப்பிறகு தேணாண்டாள் பல நிதிச்சிக்கல்களில் சிக்க, தனுஷ் இயக்கிய படம் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் போனதோடு அப்படியே டிராப் ஆனது. இந்நிலையில்தான் சன் டிவியை அணுகினார் தனுஷ். இது தனுஷ் நடிப்பில் வெளிவரப்போகும் 50-வது படம் என்பதால் சன் தரப்பு ஆர்வமாக இருந்தாலும், ஏற்கெனவே தனுஷ் எடுத்திருந்த கதை வேண்டாம், வேறு கதை சொல்லுங்கள் எனச்சொன்னது சன் டிவி.

இதற்கிடையே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் தாணு தயாரிப்பில் ‘ராயன்’ என்கிற படத்தில் நடிக்கதிட்டமிட்டிருந்தார். இதில் அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியிருந்தார் தனுஷ். ஆனால், தயாரிப்பாளர் தாணுவுக்கு ‘நானே வருவேன்’ படமே செல்வராகவன் முடிவெடுக்க, ‘ராயன்’ கதை அப்படியே நின்றுபோனது. இந்தக் கதையை அப்படியே சன் டிவியில் சொல்லி ஓகே வாங்கிய தனுஷ், இப்போது ‘ராயன்’ படத்தை முழுமையாக இயக்கிமுடித்துவிட்டார். பரபரப்பாக போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்க விரைவில் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகயிருக்கிறது. 

ராயன்' படத்தின் ஸ்பெஷல் என்ன?

ராயன் படத்தின் ஸ்பெஷல் என்ன?

காத்தவராயன் என்கிற பெயரின் சுருக்கமே ‘ராயன்’. சென்னை ராயபுரத்தில் ஒரு ஹவுஸிங் போர்ட்டில் வசிக்கும் அண்ணன் தம்பிகளைப் பற்றிய கதை. தனுஷின் உடன்பிறப்புகளாக படத்தில் சந்தீப் கிஷனும், காளிதாஸ் ஜெயராமும் நடித்திருக்கிறார்கள். முதலில் படத்தின் வில்லனாக நடிக்க இசையமைப்பாளர் தேவாவை அணுகினார் தனுஷ். ஆனால், தேவா வில்லனாக நடிக்கமறுக்க, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். ‘சார்பட்டா’ படத்தில் நடித்த துஷாரா, ‘சூரரைப்போற்று’ படத்தில் நடித்த அபர்ணா, வரலட்சுமி சரத்குமார் என படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சரவணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.  

‘பொல்லாதவன்’ படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட இயக்குநர் வெற்றிமாறனின் அதே ஸ்டைலில் தனுஷ் ‘ராயன்’ படத்தை படமாக்கியிருக்கிறார் என்கிறார்கள். சொந்தமாக தொழில் செய்து முன்னேறத்துடிக்கும் வடசென்னை ராயபுரத்தின் மூன்று இளைஞர்கள் எப்படி வன்முறைச் சூழலுக்குள் வந்து சிக்குகிறார்கள், அவர்களுக்குப் பின்னால் அரசியல் எப்படி விளையாடுகிறது, ராயன் எப்படி தன் மக்களை காத்தவராயனாக நின்று காக்கிறார் என்பதே படத்தின் முழுக்கதை. படத்தில் வன்முறை அதிகப்படியாக இருந்தாலும் ஆழமான உணர்வுகளால் கதை பின்னப்பட்டிருப்பதால் உணர்ச்சிகரமான படமாக ‘ராயன்’ இருக்கும் என்கிறார்கள்.

படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து முடித்துவிட்டநிலையில் மே மாதம் ‘ராயன்’ படத்தின் குத்துப்பாடல் ஒன்று வெளியாகயிருக்கிறது. இந்தப்பாடலில் பிரபுதேவாவுடன் தனுஷ் இணைந்து ஆடியிருக்கிறார். 500 நடனக் கலைஞர்களுடன் இந்தப்பாடல் சென்னைக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டிருக்கிறது. 

நடிகர் தனுஷ் – இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கு… நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

ராயன் படம் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.