நடிகர் சிவகார்த்திகேயன் -ஆரத்தி தம்பதியினருக்கு கடந்த ஜூன் 2-ம் தேதி மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் உள்ளனர். தற்போது இந்த தம்பதியினருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் இன்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றுள்ளது.
நெருங்கின சினிமா நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்கேற்ற இவ்விழாவில் அவர்களது மூத்த மகள் ஆராதனா இரண்டாவது மகன் குகன் ஆகியோர் ஆசையாக தேர்வு செய்த ‘பவன்’ என்ற பெயரை அக்குழந்தைக்கு சூட்டியுள்ளனர். பின்னர் சிவகார்த்திகேயன் இந்த விழா தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்.
மேலும் அதில், ‘’ஆர்த்தி.. ஆபரேஷன் தியேட்டரில் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது நீ அனுபவித்த நரகத்தை என் கண்களால் பார்த்தேன். அந்த வலியை தாங்கி எனக்கு அழகான உலகத்தை கொடுத்து இருக்கிறாய். நான் உனக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். லவ் யூ” எனக் குறிப்பிட்டு உள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது!