90’ஸ்களில் தனது புன்னகையாலேயே பல ரசிகர்களைக் கொண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக வளம் வந்தவர் நடிகை Roja. தற்போது அரசியலிலும் தனக்கென்ன ஒரு தனி இடத்தை உருவாக்கி அதிலும் வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கிறார் என்றே சொல்லலாம்!
சில தினங்களுக்கு முன்பு நடிகை Roja தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார். அங்குள்ள ஐயர்கள் மற்றும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அங்கே பணி புரியும் துப்புரவு தொழிலாளர்களும் புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது அவர்களை அவமதித்ததாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை ரோஜா வருத்தத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், ‘கோவிலின் தரைதளம் தாழ்வாக இருந்ததால், ஓடி வரும்போது கீழே விழுந்துவிடுவார்கள் என்று தான், மெதுவாக வரச்சொல்லி கை காட்டினேன். என் பக்கத்தில் வரக் கூடாது என்று கை காட்டியதாகப் பரவும் செய்தி எனக்கு வருத்தத்தை அளிக்கிறது! தூய்மை பணியாளர்கள் மீது எனக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு, ஒருபோதும் என்னைத் தொட வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்!’ என கூறியிருக்கிறார்.