Home Cinema News ஐஸ்வர்யாவுக்கு ஓகே சொன்ன Rajinikanth!

ஐஸ்வர்யாவுக்கு ஓகே சொன்ன Rajinikanth!

சூப்பர் ஸ்டார் Rajinikanth'ன் மூத்த மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா சினிமா இயக்கநராகவும் தனக்கென தனி அடையாளம் பதித்தார். 

by Santhiya Lakshmi

சூப்பர் ஸ்டார் Rajinikanth’ன் மூத்த மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா சினிமா இயக்கநராகவும் தனக்கென தனி அடையாளம் பதித்தார். 

இவர் இயக்கத்தில் உருவான முதல் படமான ‘3’ படத்தில் முன்னாள் கணவர் தனுஷ் நடிக்க, அனிருத் இந்தப்படத்தின் மூலம்தான் இசையமைப்பாளராக அறிமுகமானர். வைரல் என்கிற வார்த்தையை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய ‘’Why This kolaveri’’ பாடல் இந்தப்படத்தில்தான் இடம்பெற்றிருந்தது. 

இந்தப்படத்துக்கு அடுத்து கெளதம் கார்த்தைக்கை ஹீரோவாக வைத்து ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் சரியாகப்போகவில்லை. அடுத்து தனுஷைவிட்டுப் பிரிந்த டிப்ரஷனில் இருந்த மகளுக்காக ‘லால் சலாம்’ படத்தில் நடிக்க டேட்ஸ் கொடுத்தார் சூப்பர் ஸ்டார். முதலில் இதில் கெளரவ ரோல்தான் என பேசப்பட்டது. ஆனால், படத்தை மார்க்கெட் செய்யவேண்டும் என்பதற்காக நிறைய நாட்கள் நடித்துக்கொடுத்தார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் இந்தப்படத்தை தயாரிப்பதற்கு ரஜினிகாந்த் இன்னொரு படத்தில் நடித்துத்தரவேண்டும் என ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந்தத்தின்படிதான் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் நடித்துவருகிறார்.

ஐஸ்வர்யாவுக்கு ‘லால் சலாம்’ படம் வெற்றிப்படமாக அமையவில்லை என்கிற வருத்தம் இருப்பத்தால் ‘’அடுத்த கதை ரெடி பண்ணு… நானே நடிக்கிறேன்’’ என சொல்லியிருக்கிறாராம் அன்புள்ள அப்பா. இதனால் மீண்டும் ரஜினிக்கே இயக்குநர் ஆகயிருக்கிறார் ஐஸ்வர்யா. ‘கூலி’ படம் முடிந்ததும் அடுத்த ஆண்டு இந்தப்படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் எனத்தெரிகிறது. படத்தை தயாரிக்கப்போவது சன்பிக்சர்ஸாக இருக்கலாம் என்கிறார்கள்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.