Ajith Kumar – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் Ajithkumar – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள விடா முயற்சி படத்தின் அப்டேட்கள் கடந்த சில நாட்களாக வந்த வண்ணம் உள்ளன.
அஜித்துடன் இணைந்த திரிஷா, பின்னர் ஆரவ், அர்ஜுன், நடிகை ரெஜினா, நிகில் நாயர் என படத்தில் ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் புகைப்படத்துடன் கூடிய அப்டேட்டை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளது லைகா நிறுவனம்.
மேலும் Ajithkumar சினிமாவில் 32 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக போஸ்டர் ஒன்றையும் லைகா நிறுவனம் வெளியிட்டிருந்தது.
படத்தின் ஷூட்டிங் அசர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.
ஒரு பாடல் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் மீண்டும் அசர்பைஜான் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்து, அஜித்துடன் திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா மற்றும் நிகில் நாயர் உள்ளிட்டோர் ஒன்றாக புகைப்படம் எடுத்ததை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அஜித் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி” படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது. விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார்.
இதற்க்கு முன்பு அஜித் நடித்த வலிமை படத்தின் அப்டேட்டை எங்கு சென்றாலும் கேட்டு வந்த ரசிகர்கள் தற்போது போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து அப்டேட் வந்த வண்ணமாக உள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் சரியாக முடிவு செய்ய படாத நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் விடா முயற்சி படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.