நடிகர் அருள்நிதி தன்னுடைய படங்களை வித்தியாசமான கதைக்களத்துடன், விறுவிறுப்பான முறையில் மக்களுக்கு தருபவர். அவரின் மிரளவைக்கும் ஹாரர் படமான ‘டிமான்டி காலனி‘, 2015ல் வெளியானது. R. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று, பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது பாபி பாலச்சந்தர், விஜயசுப்ரமணியம் மற்றும் R C ராஜ்குமாரின் இணை தயாரிப்பில், அடுத்த பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் R. அஜய் ஞானமுத்து. அருள்நிதி மறுபடியும் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். ‘ஊமை விழிகள்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் அருண் பாண்டியன் இந்த படத்தில் வெகு நாட்களுக்கு பிறகு நடிக்கிறார்.
முதல் பாகத்தில் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் டிமான்டி காலனி என்ற இடத்தில உள்ள De Monte வீட்டில் நடக்கும் கதையை எடுத்திருப்பார்கள். ‘டிமான்டி காலனி 2’ படத்தில் எந்த மாதிரியான பேய் வரப்போகிறது என்ற கேள்விக்கு விடையாக இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. முதல் படத்துக்கு கெபா ஜெரேமியா இசையமைத்திருப்பார். டிமான்டி காலனி 2 படத்துக்கு சாம் C S இசையமைக்கிறார்.