நடிகர் மற்றும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் மறைவுக்கு பின்னர் பலரால் எதிர்பார்க்கப்பட்டது விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை திரையில் காணவேண்டும் என்பதுதான். பார்பதற்கு உருவத்திலும் அழகிலும் ஹீரோவை போல இல்லை என்றாலும் இன்றைய ரசிகர்கள் நடிப்பு திறமையயும், நல்ல கதையையுமே எதிர்பார்கின்றனர். அதனால் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் விஜயகாந்தின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
சண்முக பாண்டியன் 2015 –ம் ஆண்டு அறிமுக நாயகனாக சுரேந்திரன் இயக்கத்தில் சகாப்தம் எனும் படத்தில் நடித்திருந்தாலும் அந்த படத்திற்கு மக்களால் அதிக அளவில் வரவேற்பு இல்லை. பின்பு 2018-ம் ஆண்டு பி.ஜி.முத்தையா இயக்கத்தில் வெளியான மதுரவீரன் படத்தில் சண்முகபாண்டியனுடன் சமுத்திரகனி, மீனாக்சி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்த படம் நன்றாக இருந்தாலும் இதுவும் எதிர்பார்த்த அளவிற்கு திறையாரங்குகளில் ஓடவில்லை. அதன் பின்னர் அருண் பொன்னம்பலத்தில் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் தமிழன் என்று சொல் எனும் படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.
![பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்த் வாரிசு!! 2 Untitled design 62](https://kollywoodglam.com/wp-content/uploads/2024/03/Untitled-design-62-1024x580.jpg)
இந்த நிலையில் இயக்குனர் பொன்ராம் அவர்கள் சண்முகபாண்டியனை வைத்து படம் எடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் பொன்ராம் இதுற்கு முன்னதாகவே தமிழில் முன்னணி ஹீரோக்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் ஆகியோரை வைத்து படம் இயக்கி வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது. சொல்லபோனால் சிவகர்த்திகேயனின் திரையுலக பயணத்திற்கு ஊன்றுகோலாக இருந்ததே பொன்ராம் இயக்கிய மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து வயிறு குலுங்க சிரிக்கவைத்த வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் தான். அதன் பின்னர் இவர் இயற்றிய சீமராஜா மற்றும் டி.எஸ்.பி. போன்றவை எதிர் பார்த்த அளவில் இல்லை அதனால் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை.
பல முன்னணி ஹீரோக்களுக்கு உறுதுணையாக இருந்த இவர் படங்கள் சண்முக பாண்டியனுக்கு கை கொடுக்குமா என்பதை வரும் காலங்களில் திரையில் காண்போம்.