பரியேறும் பெருமாளில் தொடங்கி தமிழில் சமூக உண்மைகளைப் பயம் இல்லாமல் தனது படங்கள் வழி மக்களிடையே கொண்டு போய் சேர்க்கும் ஒரு இயக்குநர் Mari Selvaraj! இவர் மாமன்னன் படத்திற்குப் பிறகு ஓடிடிகென்றே பிரத்தியேகமாக இயக்கிய படம் வாழை! ஓடிடிகாக இயக்கிய இந்த படத்தைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலினின் வாக்குக்கேற்றவாறு அடுத்த மாதம் திரையில் வெளியாக உள்ளது.
‘வாழை’ Mari Selvaraj வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இது கமர்ஷியல் படம் அல்ல. தனது பள்ளிக்காலத்தில் நடந்த சம்பவதையும், தன் அக்காவின் இழப்பையும் ‘வாழை’யில் காட்சிப்படுத்தியிருக்கிறார் மாரி. வாழை படம் வழியாக தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குனர் மாரி!
இதற்கிடையே பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ படத்தின் ஷூட்டிங்கை கிட்டத்தட்ட 70 சதவிகிதம் முடித்துவிட்டார் மாரி செல்வராஜ். மீண்டும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. மே மாதம் வெளியான ‘First Look’ போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம்!!