மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை தந்த Dulquer Salmaan தமிழ் சினிமாவில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் அவை ரசிக்கும் படியாக இருந்தது.
மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வரும் மம்முட்டி அவர்களின் மகனாக சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து இன்று தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம், குறிப்பாக சாக்லேட் பாயாக பெண்கள் கொண்டாடி வரும் அளவிற்கு தன்னை நிரூபித்து காட்டியுள்ளார்.
மலையாளத்தில் மாஸ் ஹீரோவாகவும், ரொமான்டிக் ஹீரோவாகவும் பல வெற்றிப்படங்களை தந்த துல்கர் தமிழில் இதுவரை 4 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.தமிழில் ரொமான்டிக் ஹீரோவாகவே நடித்து பெண்கள் மத்தியில் அடுத்த மாதவன் என ரசித்து கொண்டாடப்பட்டு வருகிறார்.
ஹீரோ, பாடகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல பரிமாணங்களில் தன்னை மேலும் மேலும் மெருகேற்றி வரும் இளம் நடிகராக இருந்து வருகிறார்.
2012-ல் முதல் முறையாக ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் “second show” என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் அடுத்தடுத்து 2 படங்களில் நடித்து கலக்கினார். 2013 -ல் 4 படங்கள், 2014-ல் 5 படங்கள் என வரிசையாக படங்களில் நடித்து அசத்தினார்.
2014-ல் பாலாஜி மோகன் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படமாக “வாயை மூடி பேசவும்” என்ற படத்தில் வித்தியாசமான கதையில் Dulquer Salmaan, நஸ்ரியா, ரோபோ சங்கர், பாண்டியராஜன், கலை வெங்கட் போன்றோர் நடித்திருந்தனர். தமிழில் முதல் படமே ஹிட் அடிக்க தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அதற்க்கு நேர் மாறாக மலையாளம் பக்கம் அதிக கவனம் செலுத்தினார். 2015-ல் மணிரத்தினம் இயக்கத்தில் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்த துல்கர் தான் மீண்டும் ரொமான்டிக் ஹீரோ என்று நிரூபித்தார்.
“ஓ காதல் கண்மணி” என்ற படத்தில் நித்யா மேனன் உடன் துல்கர் ரசிக்கும் படியான நடிப்பை தந்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் துல்கர் சல்மானுக்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினார்.
அடுத்து 5 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் தேசிங் பெரியசாமியின் முதல் படமான “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” என்ற பாடலின் வரியை கொண்ட படத்தை ஒரு முறை பார்த்தால் யாரும் மறக்க மாட்டார்கள். மேலும் இந்த படத்தை பற்றி பேசாமலும் இருக்க மாட்டார்கள் என்ற அளவிற்கு படம் சைலன்ட் ஹிட் ஆனது.
Dulquer Salmaan, ரித்து வர்மா, ரக்ஸன், நிரஞ்சனி, கெளதம் வாசு தேவ் மேனன் ஆகியோர் கொண்டு காமெடி, லவ், சஸ்பென்ஸ் என படம் முழுவதும் அடுத்து என்ன நடக்கும் என யோசிக்க வைத்துக்கொண்டே இருந்தது. 2022-ல் “ஹே சினாமிகா” படத்தில் அதிதி சங்கர் உடன் நடித்திருந்தார்.
இவர் நடித்த சீதா ராம், சார்லி, பெங்களூரு டேஸ் போன்ற படங்கள் கூட தமிழ் ரசிகர்களால் பெரிதும் ரசித்து கொண்டாடப்பட்டது. தற்போது கல்கி 2898 AD படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
2014 | வாயை மூடி பேசவும் |
2015 | ஓ காதல் கண்மணி |
2020 | கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் |
2022 | ஹை சினாமிகா |