‘கூலி’ படத்துக்கான வேலைகளை முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் ‘Vettaiyan’ சத்தம் இல்லாமல் இருப்பதில் ரஜினி ரசிகர்கள் செம அப்செட்!
‘ஜெய் பீம்’ படத்தை இயக்கியவரும், முன்னாள் ஆனந்த விகடன் நிருபருமான த.செ.ஞானவேல் ரஜினியை வைத்து தற்போது ‘வேட்டையன்’ படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் வேலைகள் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது. ஆனால், செலவு இழுத்துக்கொண்டே போவதாக இயக்குநருடன் ‘லைகா’ முரண்பட, வேலைகள் திட்டமிடப்பட்டபடி போகவில்லை என்கின்றனர் படக்குழுவினர். ஆனால் ரஜினி ரசிகர்களோ அப்டேட் கொடுங்க என படக்குழுவை துளைத்து எடுக்கிறார்கள்.
![பாண்டிச்சேரியில் Rajini... ஆவேசத்தில் Fahadh Faasil... 'Vettaiyan' வேட்டைக்கு ரெடியா?! 2 Vettaiyanposter edited](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/Vettaiyanposter-edited-768x1024.jpg)
வரும் அக்டோபர் மாதம் ‘வேட்டையன்’ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் படத்தின் ஷூட்டிங் இன்னும் முழுவதுமாக முடியவில்லை. கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் ரஜினிகாந்த், ராணா டகுபதி, ரித்திகா சிங் நடித்தக் காட்சிகள் படமாக்கப்பட்டுவந்த நிலையில் இன்றோடு பாண்டிச்சேரியில் படத்தின் ஷூட்டிங் முடிகிறது.
இதற்கு அடுத்து திருவேற்காட்டில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. கோகுலம் ஸ்டுடியோஸில் ‘வேட்டையன்’ படத்துக்காக மிகப்பெரிய செட் போடப்பட்டிருக்கிறது. இங்கே அனிருத் இசையில் ரஜினிக்கான ஓப்பனிங் பாடல் படமாக்கப்பட இருக்கிறது.
ஃபகத் ஃபாசில் காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம். ஃபகத் ஃபாசிலோடு படத்தில் மஞ்சு வாரியர், துஷாரா, கிஷோர், ரக்ஷன் எனப்பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறது. கேமியோ ரோலில் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார்.
லைகா நிறுவனம் அக்டோபரில் படத்தை ரிலீஸ் செய்தே ஆகவேண்டும் என இயக்குரை நெருக்குவதால் ஷூட்டிங் மே மாதத்துக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கலாம்.