லைகா நிறுவனம் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார் நடிக்க ‘Vidaa Muyarchi’ படத்தை தயாரித்துவருகிறது. அஜித்தின் 62-வது படமான இந்தப்படம் ஆரம்பித்ததில் இருந்தே பஞ்சாயத்துதான். முதலில் AK62 என வொர்க்கிங் டைட்டிலோடு ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்ட இந்தப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.
ஆனால், 6 மாத ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் அஜித்குமாருக்கு விக்னேஷ் சிவன் சொன்ன கதையின் இறுதி வர்ஷன் பிடிக்கவில்லை. இதனால் இயக்குநரை மாற்றிய லைகா தயாரிப்பு நிறுவனம் இசை அனிருத், ஒளிப்பதிவு நீரவ் ஷா என்கிற டெக்னிக்கல் காம்போவை மாற்றவில்லை. விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி படத்தின் இயக்குநராக அறிவிக்கப்பட்டார்.
![லைகாவுக்கு அஜித்குமார் வைத்த செக்… தீபாவளிக்கு Vidaa Muyarchi ரிலீஸாகுமா?! 2 Vidaa Muyarchi](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/Fu-4RIJaAAAMQSa-576x1024.jpeg)
படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்குவதாக இருந்து பின்னர் டிசம்பரில் ஒரு வழியாகத்தொடங்கியது. படத்துக்கும் ‘Vidaa Muyarchi’ எனப்பெயரிடப்பட்டு அசுர்பைஜானில் படப்பிடிப்பு நடந்தது. ஆனால், இந்த ஷெட்யூல் திட்டமிட்டதைவிடவும் பட்ஜெட்டைத் தாண்டிப்போக அடுத்தடுத்த ஷெட்யூல்கள் பாதிகப்பட்டன.
இதற்குநடுவே லைகா நிறுவனம் ‘லால் சலாம்’ ரிலீஸ், ‘வேட்டையன்’ ஷூட்டிங் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக ‘Vidaa Muyarchi’ ஷூட் எப்போது நடக்கும் என்கிற கேள்விகள் எழுந்தன. 2024 அக்டோபர் ரிலீஸ் என திட்டமிடப்பட்டது ‘விடாமுயற்சி’. ஆனால் ஷூட்டிங் தொடர்ந்து கேன்சல் ஆகிக்கொண்டேயிருந்ததால் பொறுமை இழந்த அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் கதைக்கு ஓகே சொல்லி, அந்தப்படத்தின் தயாரிப்பாளர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் ஷூட்டிங்கையும் தொடங்கச்சொல்லி ஐதராபாத் சென்றுவிட்டார் அஜித்குமார்.
‘குட் பேட் அக்லி’ எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் கடந்த 10 நாட்களாக ஐதரபாத்தில் நடந்துவருகிறது. ஷூட்டிங் நடப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களிடம் சொல்லி 2025 பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கவும் வைத்துவிட்டார் அஜித்குமார்.
இதனால் ‘Vidaa Muyarchi’ ஷூட்டிங் எப்போது, ரிலீஸ் எப்போது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. லைகா நிறுவனத்தினர் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு நிற்க, இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்வோம் என ஒப்பந்தம் போட்டால் டேட்ஸ் தருவதாகச்சொல்லியிருக்கிறார். இல்லையென்றால் தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலேயே நடிப்பேன் என அஜித் செக் வைத்துவிட்டார்.
இதனால் ஜூலை மாதத்துக்குள் ஷூட்டிங்கை முடித்து தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என பரபரப்பாக பிளான் செய்துவருகிறது லைகா.