செர்பியா, டெல்லி ஷெட்யூல்களை முடித்துவிட்டு சென்னையில் ஷூட்டிங்கை தொடங்கியிருக்கிறது மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணி. Thuglife எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
![Thuglife ஷூட்டிங்… சிம்புவால் வந்த புதுப்பிரச்சனை! 2 Thug Life](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/GNnqWNPbwAEjloB-683x1024.jpeg)
நாயகன் படத்துக்குப்பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் ஒன்றிணையும் படம் Thuglife. இந்தப்படத்துக்கான 50 சதவிகித படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே செட் போடப்பட்டு 17 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்த ஷூட்டில் கமல்ஹாசன் ஸ்பெஷல் கெட் அப்பில் நடிக்கிறார்.
Thuglife படத்தில் கமல்ஹாசனுக்கு இணையாக சிம்பு நடிக்கிறார். சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கெனவே டெல்லியில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே சிம்பு ஏற்கெனவே தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் ‘வெந்து தணிந்தது காடு’ அடுத்து இன்னொரு படம் என தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம்போட்டு அட்வான்ஸ் பணமும் வாங்கியிருந்தார். ஆனால், ‘வெந்து தணிந்தது காடு’ மட்டுமே நடித்துக்கொடுத்துவிட்டு Thuglife படத்தின் ஷூட்டிங்கிற்குப் போய்விட்டார் சிம்பு. இதனால் ஐசரி கணேஷ் நீதிமன்றத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் சிம்பு மீது புகார் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தப்படி எங்கள் படத்தை முடித்துவிட்டுத்தான் Thuglife படத்தில் நடிக்கப்போகவேண்டும் என சிம்பு மீது இந்த வழக்கில் உத்தரவிட சொல்லப்பட்டிருக்கிறது.
Thuglife படத்தில் சிம்புவை வைத்து இன்னும் ஷூட்டிங் எடுக்கவேண்டும் என்பதோடு, படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரிலீஸ் நேரத்தில் பிரச்சனை வரலாம் என கமல்ஹாசன் – மணிரத்னம் கவலையில் இருக்கிறார்கள். இதனால் சுமூகமாக இந்தப்பிரச்சனையை முடிக்க ஐசரி படத்தில் நடித்துகொடுக்கும்படி சிம்புவிடம் இருருவமே சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது சிம்பு என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதைப்பொருத்துதான் Thuglife படத்தின் ரிலீஸ் இருக்கிறது.