ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தை தொடங்கிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் கலாட்டா ப்ளஸ் சேனலில் கொடுத்த நேர்காணலில் 2024ல் அவர் தயாரித்துள்ள கங்குவா, தங்கலான், வா வாத்தியாரே படங்கள் பற்றி பேசினார். இந்த மூன்று படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள் கிடைத்துள்ளது.
கங்குவா (2024)
இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூரியா, பாபி தியோல், தீஷா பாட்னி நடித்துள்ள படம், இந்தாண்டு அக்டோபர் 10 வெளியாகிறது. இதை பற்றி பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ‘கங்குவா’ மாபெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது என்றும் இயக்குனர் சிவா நான்கு கதைகளை சூரியாவிடம் கூறி அதில் இந்த கதையை தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார்.
பல இந்திய மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் முழுமையாக ஒரு இயக்குனர் சிவா படம் என கூறியுள்ளார். படத்தின் கதை 1500 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை என்றும் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும் அப்டேட் மேல் அப்டேட் கொடுத்துள்ளார்.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டில் தொடங்கும் என்றும் 2026ல் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
தங்கலான் (2024)
சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தங்கலான்’ படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா கூறியதாவது, “சியான் விக்ரம் இந்த படத்திற்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்துள்ளார். வேறு எந்த நடிகரும் இயக்குனருக்கான இப்படி நடித்து நான் பார்த்ததில்லை” என்றார்.
தங்கலான் படமும் ஒரு வரலாற்று படமாக அமைகிறது, இது 1060 வருடங்களுக்கு முன் நடக்கும் கதை என தெரிவித்த தயாரிப்பாளர், இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு வைத்துள்ளாராம்.
நடிகர் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண் நடிப்பில் உருவாகும் படம் ‘வா வாத்தியாரே’. இந்த படத்தை சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்த படமும் 2024ன் கடைசியில் வெளியாகும் என்ற தகவலையும் நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
நடிகர்கள் சூரியா, விக்ரம் மற்றும் கார்த்தியின் திரைப்படங்களில் 2024 வரவிருக்கும் ‘கங்குவா’, ‘தங்கலான்’ மற்றும் ‘வா வாத்தியாரே’ தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம். மேலும் கங்குவா மற்றும் வேட்டையன் படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்புகள் இல்லை என அடித்துக் கூறினார் ஞானவேல் ராஜா.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் முன்னணி நடிகர்கள் படங்கள் தொடர்ந்து வெளியாகும் நிலையில் ‘கங்குவா’, ‘தங்கலான்’ படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதிலும் இந்த படங்களால் சூரியா மற்றும் விக்ரம் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் முதல் Pan Indian நடிகர்களாக கொண்டாடப்படுவார்கள் என்ற பதிவையும் கூறியுள்ளார். இன்று மாலை 5 மணிக்கு ‘தங்கலான்’ டிரெய்லர் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.