கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான கார்த்தி கடைசியாக நடித்த ‘ஜப்பான்’ கடந்த ஆண்டு (2023) தீபாவளிக்கு வெளியானது. தற்போது, இவர் ‘சூது கவ்வும்’ இயக்குநர் நலன் குமரசாமி மற்றும் ’96’ இயக்குநர் பிரேம் குமார் இருவரும் இயக்கிக் கொண்டிருக்கும் புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இது தவிர ‘கைதி’ மற்றும் ‘சர்தார்’ ஆகிய இரண்டு படங்களின் பார்ட் 2-வும் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில், கார்த்தி தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு யெஸ் சொல்லியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
![சூர்யா பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! 2 images 2](https://kollywoodglam.com/wp-content/uploads/2024/04/images-2.jpeg)
இந்த படத்தை ‘சாமி, ஐயா, கோவில், சிங்கம் 1, 2, 3’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஹரி இயக்கவுள்ளாராம். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகப்போகிறதாம். இயக்குநர் ஹரி இப்போது விஷாலை வைத்து இயக்கி வரும் ‘ரத்னம்’ படம் வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.