மறைந்த நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலம் விஜய்யின் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் வர தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
‘’தமிழ்த்திரை உலகைச்சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்… கேப்டன் Vijayakanth ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்தி இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் எங்களிடம் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம் எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்று Premalatha Vijayakanth அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
வெங்கட்பிரபு என்ன சொல்லப்போகிறாரோ?!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com