ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்த லோகேஷ் கனகராஜ் சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற சென்றது பற்றிய தகவலை கிட்டத்தட்ட ஒரு மாதம் அல்லது 40 நாட்களுக்கு முன்பே கூலி படக்குழுவினருக்கு தெரிந்த ஒன்றே.
மற்ற மாநிலத்தை சேர்ந்த நடிகர்களின் ஷூட்டிங் தேதியும் முக்கியம் என்பதால் முன்கூட்டியே இந்த சிகிச்சை பற்றிய தகவலை சொல்லிவிட்டார். அதைவைத்துதான் நாங்கள் படப்பிடிப்பை திட்டமிட்டிருந்தோம்.
செப்டம்பர் 28 -ஆம் தேதி அவருடைய படப்பிடிப்பை முடித்து விட்டு தான் அவர் சிகிச்சை பெற மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இந்த சிகிச்சை குறித்து முன்பே எங்களுக்கு தெரிந்திருந்தாலும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சிலர் பேசும் கருத்தை பார்த்து நாங்களே பயந்துவிட்டோம்.
#Watch | "மருத்துவமனையில் ஒரு சின்ன சிகிச்சை பண்ண வேண்டியது இருக்குனு 40 நாட்கள் முன்னாடியே ரஜினி சார் எங்க கிட்ட சொல்லிட்டாரு"
— Sun News (@sunnewstamil) October 4, 2024
"அக்டோபர் 15 முதல் ரஜினிகாந்த் சார் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்.." -இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி#SunNews | #Rajinikanth | @Dir_Lokesh pic.twitter.com/GF5KHjPZqo
அவர்கள் சொல்வது போல படப்பிடிப்பு தளத்தில் ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, ஒட்டுமொத்த படக்குழுவும் இங்கே மருத்துவமனை வாசலில்தான் நின்றிருப்போம். நாங்கள் அங்கே தனியாக ஷூட்டிங் நடத்திக் கொண்டு இருக்க மாட்டோம்.
ரஜினிகாந்த் என்ற மனிதர் அனைவராலும் கொண்டாடக்கூடிய ஒருவர். அப்படி இருக்கும்போது ஒரு சிலர் மிகவும் உறுதியாக அனைத்தும் தெரிந்தது போல பக்கத்தில் இருந்தே பார்த்த படி பேட்டிகளில் பேசுவது எங்களுக்கே பயத்தை ஏற்படுத்தியது. ரஜினி நன்றாக இருக்கிறார். அவர் எப்போதும் கூறுவது போல ஆண்டவன் அருளால் அவர் நலமாக உள்ளார்.
ஓய்வு பெற்று வரும் நிலையில் வரும் அக்டோபர் 15 -ஆம் தேதி முதல் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று பேட்டியில் கூறியிருந்தார்.
ரத்தக் குழாயில் வீக்கம் இருந்ததால் நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், இடையீட்டு சிகிச்சை மூலம் அதனை சரி செய்யது “ஸ்டென்ட்” என்ற கருவி பொருத்தப்பட்டது. சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பிய நிலையில் மருத்துவமனையில் இருந்த சமயம் நலம்பெற வேண்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.