‘கோமாளி’ படம் மூலம் இயக்குநராக வெற்றி கண்ட பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படம் மூலம் கதையின் நாயகனாகவும் களமிறங்கி 2K கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோஸ் லிஸ்டில் கெத்தாக இடம் பிடித்து விட்டார். தற்போது, இவர் ‘LIC’ (Love Insurance Corporation) என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
!['LIC'க்கு பிறகு 'லவ் டுடே' பிரதீப் நடிக்கப்போகும் புதிய படத்தின் இயக்குநர் யார் தெரியுமா? 2 banner](https://kollywoodglam.com/wp-content/uploads/2024/04/banner.jpg)
இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் ஹீரோயினாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறாராம். இதனைத் தொடர்ந்து ‘ஓ மை கடவுளே’ புகழ் அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் பிரதீப்.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு யெஸ் சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தி ஈஸ்வரன் இயக்கவுள்ளாராம்.
இவர் பிரபல இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இன்னும் பெயரிடப்படாத இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளதாம்.