தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் என்ற கிராமத்தில் பிறந்து 2018-ஆம் ஆண்டு “பரியேறும் பெருமாள்” என்ற படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார் மாரி செல்வராஜ். பெரும் பாராட்டுக்கள் அவர் எடுத்த அடுத்தடுத்த படைப்புகளான “கர்ணன், மாமன்னன்” படத்திற்கும் கிடைத்தது. அடித்தட்டு மக்களின் குரலாய் விளங்கும் அவரது எல்லா படங்களும் ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 23 அன்று வெளியான “Vaazhai” திரைப்படமும் மக்கள் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த கொண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குற்றச்சாட்டை வைத்துள்ளார் எழுத்தாளர் சோ.தர்மன். பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய சிறுகதை “வாழையடி…” தான் மாரி செல்வராஜ் இயக்கி வெளியிட்டுள்ள படம் வாழை என்று கூறியிருக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது, “பொதுவாக திரைப்படம் பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை. அவ்வபோது பார்ப்பது உண்டு. இப்படி பலரும் வந்து என்னிடம் வாழை படம் பார்த்தீர்களா என்று கேட்டனர். எனது சிறுகதை அப்படியே அந்த படத்தில் வந்ததாக தெரிவித்தனர். அதனால் நான் சென்று பார்த்தேன். என் கதையை திரைப்படத்தில் பயன் படுத்த என்னிடம் எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை. இது சினிமாகாரர்கள் வழக்கம்” என்று கூறியுள்ளார்.
படம் வெற்றி பெற்ற பின், இது தனது கதை என்று கூறி சர்ச்சை கிளம்புவது தமிழ் சினிமாவில் இது முதல் முறை அல்ல. உண்மையில் “வாழை” படத்தின் கதை திருடப்பட்ட ஒன்றா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக மாரி Mari Selvaraj இன்று தனது X தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இந்த சர்ச்சைகளுக்கு பதில் கூறும் விதமாக அமைந்துள்ளது.
வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன்அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி❤️
— Mari Selvaraj (@mari_selvaraj) August 28, 2024
—
வாழைhttps://t.co/VRFo53NxFn