தமிழில் ’96’ படத்தை இயக்கிய இயக்குனர் சி. பிரேம் குமார் அடுத்ததாக நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் ஸ்வாமி, ராஜ் கிரண், ஸ்ரீ திவ்யா நடிப்பில் ‘மெய்யழகன்’ படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது, அதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் கிளர்வோட்டம் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தொடங்கும் இந்த முன்னோட்டத்தில், வெளியூரியூரில் வேலை பார்த்து பல நாட்கள் கழித்து ஒரு கல்யாணத்துக்காக ஊர் திரும்புகிறார். அங்கு கள்ளம் கபடம் இல்லாமல், தஞ்சாவூர் பாணியில் மிக இயல்பாக பேசி நடித்துள்ளார்.
‘மெய்யழகன்‘ படத்தில் இதுவரை வெளியான எந்த போஸ்டர்களில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி உடைய போஸ்டர்கள் வெளியாகாமல், புதிய கண்ணோட்டத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த் ஸ்வாமி இணைந்து இருப்பது மட்டுமே வெளியாகியுள்ளது. படத்திலும் இந்த இருவரின் உறவும் அவர்களின் புரிதல் பற்றி தான் பேசுவார்கள் என்று தெரிகிறது.
சூரியா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் படத்தில் வெளியாகியுள்ள ஆறு பாடல்களும் கேட்பதற்கு மிக இனிமையாகவும், படத்தின் உணர்வூகளை வெளிப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது.