மூக்குத்தி அம்மன் 2 படத்தின் செய்திக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று ஆச்சரியமான அப்டேட் வெளியாகி திருப்பமாக அமைந்துள்ளது. 2020 ல் RJ பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்த படம் தான் ‘மூக்குத்தி அம்மன்‘.
நயன்தாராவை அம்மனாக நடிக்க வைத்து, அதில் நகைச்சுவை, மூடநம்பிக்கை, ஆன்மிகத்தின் வழியாக நடக்கும் ஊழல் என பல தகவல்களை மிக அருமையாக பேசிய படம் தான் ‘மூக்குத்தி அம்மன்’. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு அதிகமானது.
கடந்த சில மாதங்களாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை யார் இயக்க போகிறார்கள்? கதாநாயகியாக நடிகை நயன்தாரா மீண்டும் நடிப்பாரா? எப்படிப்பட்ட கதையாக இது அமையும் என்ற பல ஆவலான கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்துள்ளது.
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை பிரபல ஹிட் இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இதை ஒரு கமர்ஷியல் படமாக உருவாக்க தயாரிப்பு நிறுவனமான VELS Films International முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே 2024 உடைய மிக சில தமிழ் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த ‘அரண்மனை 4’ படத்தை இயக்கிய சுந்தர் சி, இப்படத்தை இயக்கவுள்ளது படத்திற்கு மேலும் பலமாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் நடிகை நயன்தாரா தான் அம்மனாக நடிக்கவுள்ளதாகவும், முதல் பாகத்திற்கும் இந்த படத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் நடிகரும் இயக்குனருமான RJ பாலாஜி சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். அதனால இரண்டாம் பாகம் இயக்குனர் சுந்தர் சி உடைய இயல்பான பேய் கதையாக அமையுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.