Home Cinema News நாக சைதன்யா மற்றும் சமந்தா மீது ஆந்திர பெண் அமைச்சர் குற்றச்சாட்டு! 

நாக சைதன்யா மற்றும் சமந்தா மீது ஆந்திர பெண் அமைச்சர் குற்றச்சாட்டு! 

பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்து குறித்து ஆந்திர அமைச்சர் Konda Surekha அபாண்டமாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். 

by Vinodhini Kumar

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா தங்களின் விவகாரத்தை 2021ம் ஆண்டு அறிவித்தனர். இருப்பினும் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை இன்றும் பொது மேடைகளில் விவாதிக்கப்படுகிறது. தெலுங்கு திரைத்துறையில் பல திரை குடும்பங்கள் மத்தியில் நாகர்ஜுனா அக்கினேனி குடும்பத்தினர் சமீபத்தில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளனர். 

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஆந்திர மாநில காங்கிரஸ் அமைச்சர் Konda Surekha, எதிர் கட்சி அமைச்சர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அதோடு நிறுத்தாமல் நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து செய்தது குறித்தும் பேசியது தான் இன்று சர்ச்சையாக வெடித்துள்ளது. 

நடிகர் நாக சைதன்யா அவரின் முன்னாள் மனைவி சமந்தாவை எதிர் கட்சி அமைச்சருடன் பாலியல் உறவு வைக்க வற்புறுத்தியதாக பெண் அமைச்சர் Konda Surekha அபாரமாக குற்றம் சாட்டியுள்ளார். நாக சத்தன்யா அவர்கள் சமந்தாவை வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தான் இருவரும் விவாகரத்து செய்தனர் என்றும் பேசினார். 

மேலும் இது போல் பல திரை குடும்பங்கள் தெலுங்கு சினிமாவில் உள்ள நடிகைகளை வற்புறுத்துவதாக அமைச்சர் பேசியது இன்று காட்டு தீ போல் பரவி, தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். முக்கியமாக அக்கினேனி குடும்பத்தினர் அமைச்சரின் கருத்துக்கு வன்மையாக கண்டனம் எழுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளனர். 

Samantha about Minister's accusation

இதைப்பற்றி நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சினிமா துறையில் பணியாற்றுவதை பற்றி உருக்கமாக பேசியுள்ளார். மேலும் “எங்களது விவாகரத்து தனிப்பட்ட விஷயமாகும். இருவரும் மனம் ஒத்து தான் பிரிந்துள்ளோம். இதில் எந்தவித அரசியல் ரீதியான காரணங்களும் இல்லை” என தெரிவித்துள்ளது. 

இது பற்றி நாக சைதன்யாவும், தெலுங்கு பிரபலங்கள் அல்லு அர்ஜுன், ஜூனியர் NTR மற்றும் பலர் தங்களின் கருத்தை தெரிவித்துள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுன் “இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை திரைத்துறையினார் மீது அரசியல்வாதிகள் தெரிவிப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

நாக சைதன்யா மற்றும் நடிகை அமலாவும் தங்களின் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பலி ஆதாரமற்றது என்றும் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களால் இப்படி குற்றம்சுமத்துவது தவறு என தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் அரசியல் கட்சி தலைவர்கள் இதனை பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். 

இணையத்தில் இந்த சர்ச்சை பெரிய பேசுபொருளாக வெடித்ததால் தற்போது அமைச்சர் Konda Surekha நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கருத்து தெரிவித்தது தவறு தான் என்றும் ஆனால் எதிர் கட்சி அமைச்சர் பற்றி கூறியது முற்றிலும் உண்மை என பேட்டியளித்துள்ளார். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.