இயக்குனராக தன்னுடைய 50வது படத்தை இயக்கிய நடிகர் தனுஷ், அடுத்ததாக ஒரு காதல் கதையை படமாக இயக்க்கவுள்ளார். இந்த படத்துக்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பும் வைத்து பல சுவாரசியமான செய்திகளுடன் உருவாக்கி வருகிறது.
இந்த படத்தில் புதுமுக நடிகர்கள் பவிஷ் நாராயணன், ரம்யா ரங்கநாதன், ரபியா கதூன், வெங்கடேஷ் மேனன் உடன் நமக்கு தெரிந்த இளம் நடிகர்கள் அனிகா சுரேந்திரன், ப்ரியா வாரியார், மாத்தியூ தாமஸ் நடித்துள்ளார்கள். ‘வழக்கமான காதல் கதை’யாக இது இருக்கும் என தலைப்புடன் போஸ்டர் வெளியானது. இதன் அறிவிப்பை ஒரு மோஷன் வீடியோவாக வெளியிட்டிருந்தார்கள்.
தற்பொது இந்த படத்தின் முதல் பாடலான ‘Golden Sparrow’ விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்‘ படத்தின் இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் ஆடியுள்ளார் என்ற அதிகார்பூஓர்வ போஸ்டரும் வெளியானது. ஜி வி பிரகாஷ் இசையில் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் செய்தி வெளியானது.
நடிகர் தனுஷ் இயக்கிய முதல் படம் ‘ப. பாண்டி’ ஒரு நல்ல காதல் படமாக உருவானது. இரண்டாவது படம் தன்னுடைய 50வது படமான ‘ராயன்’ ஒரு ஆக்ஷன் படமாக இருந்தது. தற்போது இந்த மூன்றாவது படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்‘ ஒரு வழக்கமான காதல் கதை என்று அறிவித்துள்ளனர்.