Home Cinema News மே மாதம் ஆரம்பமாகும் ‘சூர்யா 44’ ஷூட்டிங்… இந்த படத்துக்கு இசையமைக்கப்போவது யார் தெரியுமா?

மே மாதம் ஆரம்பமாகும் ‘சூர்யா 44’ ஷூட்டிங்… இந்த படத்துக்கு இசையமைக்கப்போவது யார் தெரியுமா?

by Sivaanantham RB

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் கைவசம் ‘கங்குவா, வாடிவாசல்’, இயக்குநர் சுதா கொங்கராவின் படம் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் படம் என நான்கு படங்கள் மட்டுமே இருக்கிறது. 

இதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் சூர்யாவின் கேரியரில் 44-வது படமாம். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரை கடந்த மார்ச் 28-ஆம் தேதி தான் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

santhosh narayanan suriya 44

இது சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ரெடியாகும் முதல் படம் என்பதால் இப்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி விட்டது.  இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை சூர்யாவின் ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறதாம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், படத்தின் ஷூட்டிங்கை வருகிற மே மாதத்தில் இருந்து ஆரம்பிக்கவும், படத்தை அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.