தமிழ் திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன், ஒரு பிரபலமான திரைக்கதையாசிரியர், மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். அவரின் படைப்புகள் கிராமப்புற வாழ்க்கையும் மனித உறவுகளையும் மையமாகக் கொண்டு உருக்கமான கதைகளை வெளிப்படுத்துகின்றன. ‘மைனா’ மற்றும் “கும்கி” போன்ற திரைப்படங்கள் அவரை பற்றி பேசும்!
இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் ‘மாம்போ’. வனிதா விஜயகுமாருக்கும், சீரியல் நடிகரான ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஶ்ரீஹரி இந்தப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஆகாஷ் – வனிதா பிரிவுக்குப்பிறகு விஜய் ஶ்ரீஹரி தந்தையின் அரவணைப்பில் வளர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் டைட்டிலை இன்று இசையமைப்பாளர் டி.இமான் சமூகவலைதளங்களில் வெளியிட்டார். ஆசியாவிலேயே உண்மையான சிங்கத்துடன் படமாக்கப்பட்டிருக்கும் படம் இதுதான் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே ஶ்ரீஹரியின் தாயான வனிதா விஜயகுமார் ‘’அழகியல் இயக்குநரான பிரபு சாலமன் படத்தின் மூலம் என் மூத்த மகன் ஹீரோவாக அறிமுகமாவதில் மிகுந்த சந்தோஷம். என் மகனை குருவாக இருந்து வழிநடத்தும் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி’’ என்று தனது எக்ஸ் தளத்தில் எழுதியிருக்கிறார்.