கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு Apollo மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் நேற்று வீடு திரும்பினார். இதயத்தில் இருந்து வெளியேறும் பிரதான நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்தை அகற்ற நவீன அறுவை சிகிச்சை முறையான Transcatheter முறை மேற்கொள்ளப்பட்டது. வெற்றிகரமாக அந்த வீக்கம் ஸ்டெட் வைத்து அடைக்கப்பட்டு ICU-வில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார். மூன்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறினர்.
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024
மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சூப்பர் ஸ்டாருக்காக இந்தியா முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் வேண்டுதல் நடத்திய பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அணைத்து அரசியல் அன்பர்களும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், மற்றும் நான் நலம் பெற பிரார்த்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.”
Encounter Specialist ‘வேட்டையன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!
திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தி பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. தற்போது முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ள நடிகர் ரஜினி சில நாட்களில் மீண்டும் “கூலி” (Coolie) பட ஷூட்டிங்கில் பங்கு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி படக்குழுவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் இணையும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.