வித்தியாசமான கதைக்கருவை கொண்டு கிராமம் சார்ந்த படங்களை இயக்கி ரசிக்க வைக்கும் Seenu Ramasamy -யின் அடுத்த படைப்பாக கோழிப்பண்ணை செல்லதுரை.
விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் மற்றும் விஷ்ணு விஷாலின் நீர் பறவை போன்ற வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குநர் சீனு ராமசாமி.
சீனு ராமசாமி இயக்கத்தில் அடுத்து வெளியாகும் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு முதல் தொடங்கப்பட்டது. புதுமுக நடிகர் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோழிப்பண்னை செல்லதுரை என்று பெயரிடப்பட்டது.
இந்த படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கவுள்ளதாகவும், அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்வதாகவும், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கவுள்ளார். நீர்ப்பறவை படத்தில் என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் Seenu Ramasamy இசையில் ரசிக்க வைத்தது. அதன் பின்னர் மீண்டும் கூட்டணி சேருகின்றனர்.
படத்தின் பாடல் வரிகள் வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதசி போன்றோர் எழுதியுள்ளனர். முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்த படம் தேனி பகுதியை சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. மேலும் படம் செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான டீசரை வெளியிட்டு படத்தின் தேதியை அறிவித்தார் சீனு ராமசாமி.
டீசரில் யோகி பாபு குரலில் “இங்க ஓட்றவன் ஓடிட்டு தான்டா இருக்கணும். ஆனா வாழ்க்கையில யாருக்காக ஓட்றோம்னு தெரிஞ்சிக்கணும்ல” என்ற எதார்த்தமான பேச்சின் மூலம் டீசர் தொடங்குகிறது.
யூடூப் மூலம் பிரபலமான ஏகன், கனா கானும் காலங்கள் சீசன் 2 -வில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். இந்த படத்தின் மூலம் அவர் அடுத்தகட்டத்துக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் சமீபத்தில் வெளியான ஜோ படத்தில் ரியோவின் நண்பனாகவும் நடித்து கவனம் பெற்றார். இந்த படத்தில் ஏகன் மற்றும் பிரகிடா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளனர்.
காமெடி சார்ந்து நடித்து வந்த யோகி பாபு தற்போது கதைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் உள்ள கேரக்டரில் நடித்து கவனம் பெற்று வருகிறார். இந்த படத்திலும் காமெடி, செண்டிமெண்ட் என கலக்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.