சினிமா உலகில் பிரம்மாண்டங்களுக்கு பெயர் போனவர் டைரக்டர் Shankar. இவரின் படைப்புகள் பல ஆண்டுகள் ஆனாலும் ரசித்து கொண்டாடும் வகையில், தொலைநோக்கு சிந்தனை கொண்டு இருக்கும்.
![பிரமாண்ட இயக்குனர் Shankar-ன் அடுத்த 3 படங்களின் கதை ரெடி! 2 Director Shankar](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/07/Director-Shankar-1024x927.jpeg)
ஜென்டில் மேன் படத்தில் தொடங்கி காதலன், இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ என எல்லா காலத்திலும் கொண்டாடும் படங்களை தந்து வருகிறார். இன்று பல பிரமாண்டமான படங்கள் அடுத்தடுத்து வந்தாலும் இதற்க்கு விதை Shankar அவர்கள் போட்டது தான்.
பெரிதாக டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராயை இரட்டை வேடத்தில் புது வித டெக்னாலஜி கொண்டு காட்டியிருப்பார். சங்கர் அவர்களின் தொலைநோக்கு சிந்தனை சினிமா உலகில் அனைவரையும் ஆச்சரிய பட வைத்து வருகிறது.
![பிரமாண்ட இயக்குனர் Shankar-ன் அடுத்த 3 படங்களின் கதை ரெடி! 3 Aishwarya Rai in Jeans](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/07/Aishwarya-Rai-in-Jeans-1-1024x576.jpeg)
அந்த வகையில் தற்போது இந்தியன் 2 படத்தை முடித்து விட்டு ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’, ‘இந்தியன் 3’ போன்ற படங்களில் வேலை முடிவடையும் நிலையில் இருந்து வருகிறது.
இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பு வேலை முடிந்த பின்னர் 3 கதைகள் கைவசம் உள்ளது என்றும் அதனை பிரம்மாண்டமாக எடுக்க திட்டம் உள்ளது என்றும் சமீபத்தில் கூறியிருந்தார்.
![பிரமாண்ட இயக்குனர் Shankar-ன் அடுத்த 3 படங்களின் கதை ரெடி! 4 Indian 2 poster](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/07/Indian-thatha.jpeg)
வரலாற்று சிறப்பு மிக்க சரித்திர கதை, ஜேம்ஸ் பாண்ட் மாதிரியான த்ரில்லர் கதை, சயின்ஸ் பிக்ஷன் மாதிரியான அறிவியல் சார்ந்த கதை என மூன்று கதைகள் யோசித்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இவை அனைத்தும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கவுள்ளதாகவும், இதற்காக உலகில் சிறந்த கலைஞர்கள் கொண்ட குழுவை உருவாக்கி பல புதுமைகள், ரசிக்கும் படியான VFX காட்சிகள் என பல புதிய தொழில் நுட்பங்களை கொண்டு எடுக்கவுள்ளதாக திட்டமிட்டு உள்ளார்.
28 வருடங்களுக்கு பிறகு, பல சிரமத்திற்கு ஆளான பின்னர் இந்தியன் படத்தின் அடுத்த பாகத்தை வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தியன் முதல் பாகத்தை போலவே அரசியல், ஊழல், லஞ்சம் என மக்களுக்கு தேவையான கருத்துக்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.