சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் மலையாளத் திரைப்படமான பிரேமலு தான் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தைப் பார்த்து விட்டு தனது சமூகவலைதள பக்கத்தில் படத்தை பாராட்டி ஒரு பதிவு போட்டுள்ளார், அதில் ”பிரேமலு ஒரு ஜாலியான என்டர்டெயின்னர்,அப்படக் குழுவினர்க்கு வாழ்த்துக்கள்”எனப் பதிவிட்டிருந்தார்.அப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பிரேமலு பாராட்டப்படுவது ஏன்? அப்படி அதில் என்ன உள்ளது தெரிந்து கொள்ளலாம்.

இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லென், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி மலையாளத்தில் வெளியான இந்த படம் மார்ச் 15ம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.கேரளாவில் 50 கோடிகளைத் தாண்டியும் உலகளவில் 100 கோடியை கடந்தும் வசூலித்துள்ளது.தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்ட பத்து தினங்களில் 10 கோடிகளைக் கடந்து வசூல் சாதனை செய்துள்ளது. தமிழிலும் தற்போது மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வெளியான சில தினங்களிலேயே, தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த மலையாளப் படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழகமெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது.ரசிகர்களை இந்த படம் எப்படி ஈர்த்து 100 கோடி வசூல் படமாக மாறியது என்கிற அனைத்து கேள்விக்கும் ‘பிரேமலு’ படம் அழகாக விளக்கமளித்து விடுகிறது.
பிரேமலு கதை:

கேரளாவில் கல்லூரியில் படிக்கும் போது காதல் தோல்வியை சந்திக்கும் நஸ்லென் வெளிநாட்டுக்கு செல்ல ஆசைப்படுகிறான். ஆனால், அதிலும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதன் பின்னர் ஹூரோயினைப் பார்த்து அவர் மேல் காதல் வயப்படுகிறார்.அவர் ஹீரோயினுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதை காமெடி கலந்த காதல் படமாக இயக்கி இளைஞர்களை கவர்ந்துள்ளனர்.அதனால் தான் படம் மெஹா ஹிட் ஆகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com