‘மெரீனா’ படம் மூலம் சினிமாவுக்குள் ஹீரோவாக உருவெடுத்த சிவகார்த்திகேயன் ‘அமரன்’ படத்தோடு 22 படங்கள் நடித்துமுடித்துவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்துவரும் சிவகார்த்தியேனின் லைன் அப் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரெடி.
‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தியிடம் ரஜினிகாந்த் கதை கேட்டு ஓகே சொல்லியிருந்தார். அடுத்து ரஜினியை இயக்கப்போகிறோம் என சிபியும் உற்சாகத்தில் இருக்க, சட்டென ரூட்டை மாற்றி த.செ.ஞானவேல், லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு ஓகே சொல்லிவிட்டார் சூப்பர் ஸ்டார். அதனால் ரஜினிகாந்துக்கு சொன்ன கதையை மீண்டும் தன்னுடைய ‘டான்’ ஹீரோவிடமே சொல்லலாம் எனச்சொல்ல, கதையக் கேட்ட சிவகா-வும் ஓகே சொல்லிவிட்டார். முருகதாஸ் படம் முடிந்ததும் சிபி சக்கரவர்த்தி படத்தில் நடிக்க இருக்கும் சிவகார்த்திகேயன், இந்தப் படத்தின் இடைவெளிகளில் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்தப்படத்தில் நடிக்க டேட்ஸ் கொடுத்திருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா, ஶ்ரீலைலா எனப்பெரிய ஹீரோயின்களிடம் பேசப்பட்டுவருவதாகச் சொல்கிறார்கள். ராஷ்மிகா ஓகே சொல்லிவிட்டால் சிபி-சிவகா படத்தில் அவர்தான் ஹீரோயின்!