நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆண்டு வெளிவந்த சூது கவ்வும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே இதுவரை இல்லாத பாணியின் இந்த படத்தின் அமைப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களையும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இது ஒரு ப்ளாக் பஸ்ட்டர் ஹிட் படமாகும்.
இந்த படத்தின் கதாநாயகனான விஜய் சேதுபதி தனக்கென ஒரு திட்டங்களை வைத்துக்கொண்டு திருட்டு மற்றும் கடத்தல் தொழில்களில் ஈடுபட்டுவருவது போலவும் பின் ஒரு அரசியல்வாதியின் மகனை கடத்த திட்டம் போடுவதையும் கதையாக கொண்டது. இந்த படத்தில் சீரியஸ் ஆகா பேசும் ஒவ்வொரு வசனமும் சிரிப்பை தூண்டும். முட்டாள்தனமாக முடிவெடுத்து பல இடங்களில் சிக்கிக்கொண்டு பின் நினைத்ததை சாதிக்கும் கதையம்சம் கொண்ட இந்த படம் விஜய் சேதுபதியின் திரைபயணத்திற்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதில் விஜய் சேதுபதியின் கேர்ள் ப்ரண்ட் ஆக சஞ்சிதா வருவதும் அவரை மாமா என அழைப்பதும் “சூப்பர் மாமா” என மோடிவேட் செய்வதும் புதுவிதமாக நகைச்சுவையாக இருக்கும். இந்த படத்தில் இடம் பெரும் “காசு பணம் துட்டு மணி” எனும் பாடல் கானா பாலா வாள் எழுதி நடிக்கப்பட்டு மெகாஹிட் அடித்தது. இந்த படத்தின் ரிலீஸ் க்கு பின்னர் இதைபோலவே பல தமிழ் படங்கள் வெளிவந்து ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் என்ற தலைப்பில் இந்த படத்தின் தொடர்ச்சியை படமாக்கி உள்ளதாக இந்த படத்தின் திரைக்குழுப்பஸ்ட் லுக்-ஐ வெளியிட்டுள்ளது. இந்த படத்தை நலன் குமாரசாமியின் கீழ் உதவி இயக்குனராக இருக்கும் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கவுள்ளார். அதே போல் இந்த படத்தின் ஹீரோவும் விஜய் சேதுபதி இல்லாமல் சிவா நடித்துள்ளார். இந்த படத்தின் ப்பஸ்ட் லுக் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புது காம்பினேசன் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.