தற்போது காமெடியன் Soori என்பதை மறந்து ஹீரோ Soori -யாக மாறி வரும் சூரியின் அடுத்த ஹீரோ சப்ஜக்ட் படம் விலங்கு Web Series இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜனுடன்.
புருஸ்லீ படத்தை தொடர்ந்து விலங்கு என்ற வெப் சீரிஸ் மூலம் தன்னை சினிமா உலகிற்கு அடையாளப்படுத்தியவர் பிரசாந்த் பாண்டியராஜன். வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு விமலுக்கு பெரிய அளவில் பெயர் சொல்லும் படியாக அமைந்தது.
இவர் எடுக்கும் அடுத்த படத்தின் கதையை சூரியிடம் சொல்ல சூரிக்கு கதை பிடித்து போனதாக தகவல் வந்துள்ளது. காமெடியில் கலக்கி வந்த சூரி விடுதலை படத்தின் மூலம் ஹீரோ அவதாரமெடுத்தார். அடுத்து கருடன் படத்தில் தற்போதைய ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடிப்பில் மிரட்டியிருந்தார்.
இனி சூரி காமெடி நடிகராக இல்லாமல் ஹீரோவாக நடிக வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். சூரியும் அதே போல கதையில் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் SK ப்ரோடக்சன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்தில் முக்கிய கேரக்ட்டரில் சூரி நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 23 -ல் ரிலீஸ் ஆகவுள்ளது. சூரியின் நடிப்பை பெரிய அளவில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.
சூரி மற்றும் பிரசாந்த் இருவரும் நீண்ட காலமாக நட்பாக இருந்து வந்த நிலையில் படம் எடுப்பது குறித்த பேச்சுக்கு தற்போது தான் சந்தர்ப்பம் வந்துள்ளது. “கருடன்” படத்தைத் தயாரித்த குமார் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.
குடும்பக்கதை சார்ந்த கதை என்பதால் ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம் விரும்பும் படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என தெரிகிறது.
விலங்கு என்ற புது வித கதைக்களத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் -ம், ஹீரோவாக அவதாரமெடுத்து சூரியும் கூட்டணி சேரும்போது புதுவித காம்பினேஷன் ஆக இருக்கும் என தெரிகிறது.
இந்த படத்திற்கான அப்டேட் வரும் நாட்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.