இந்த ஆண்டில் வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாசிட்டிவ் ரிவ்யூ தந்து கலக்கியுள்ளது SUNDAR.C- யின் Aranmanai 4
சுந்தர் சி இயக்கி நடித்து மே 3-ல் வெளியான அரண்மனை 4 படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, வி.டி.வி. கணேஷ் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுந்தர் சி 2014-ஆம் ஆண்டு பேய்யை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அரண்மனை படத்தின் முதல் பாகமாக வைத்து 2,3,4 என தொடர்ந்து அரண்மனை சீரியஸ் ஆக எடுத்து வந்துள்ளார். 5 வது பாகம் வரும் என அரண்மனை 4 படத்தின் இறுதியில் லீட் கொடுத்துள்ளார்.
![வசூல் வேட்டை செய்த SUNDAR.C-யின் Aranmanai 4… 2 Untitled design 20 1](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/Untitled-design-20-1-1024x683.png)
அரண்மனை 4 படத்தை குஷ்பூ சுந்தர் மற்றும் அருண் குமார் இணைந்து அவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ்ஸ் மீடியா நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளராக HIPHOP ஆதி, எடிட்டராக பென்னி ஆலிவர் பணியாற்றியுள்ளனர்.
இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் பெரும்பாலும் பெரிய அளவில் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. மற்ற மொழிபடங்கள் தமிழில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தமிழில் வெளியான அரண்மனை 4 படம் நல்ல வரவேற்பை பெற்று ஆறுதல் படுத்தியுள்ளது.
பாக் என்ற பேய்யை மையமாக கொண்டு அரண்மனை 4 படம் எடுக்கப்பட்டது. படத்தில் காமெடி, திகில், செண்டிமெண்ட் என காமெடி ஹாரர் படமாக கலக்கியுள்ளது. இறுதியில் கிளைமேக்ஸ் காட்சியில் அம்மன் பாடலிக்கு குஷ்பு , சிம்ரன் இருவரும் ரசிக்கும் படியாக டான்ஸ் செய்திருப்பார்கள்.
![வசூல் வேட்டை செய்த SUNDAR.C-யின் Aranmanai 4… 3 Untitled design 21 2](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/Untitled-design-21-2-1024x683.png)
படம் வெளியாகி முதல் வார வசூல் 50 கோடிகளை தாண்டியிருந்தது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஒரு நல்ல படம் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.
தற்போது வரை அரண்மனை 4 படத்தின் மொத்த வசூல் 100 கோடியை தொட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் சுந்தர் சி இயக்கிய படங்களில் 100 கோடி வசூல் செய்த முதல் படமாக அரண்மனை 4 உள்ளது. கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து இந்த ஆண்டில் இதுவரை 100-கோடி வசூல் செய்த படமாக அரண்மனை 4 இருந்து வருகிறது.
கோடைவிடுமுறையில் இதற்க்கு முன்பு வெளியான பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.