தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூரியா, தன்னுடைய 49வது பிறந்தநாளை வரும் ஜூலை 23 கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசி மருத்துவமனையில் அவரின் ரசிகர்கள் விடுமுறை நாள் என்றும் பார்க்காமல் போட்டி போட்டு ரத்த தானம் செய்துள்ளனர். இந்த மருத்துவமனையில் மட்டும் 500 ரசிகர்கள் ரத்த தானம் செய்துள்ளனர். இதை பாராட்ட நடிகர் சூர்யா வீடியோ கால் வழியாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதை போல தமிழ்நாட்டில் வேவ்வேறு பகுதிகளில் ரத்த தான முகாம்கள் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம், பெண்களுக்காக இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. தன்னுடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் ரத்த தானம் செய்வதை தெரிந்துக்கொண்ட நடிகர் சூரியா, மும்பையில் ரத்த தானம் செய்த வீடியோ வைரல் ஆகியதும் பலரால் பாராட்டப்பட்டது.
திரையில் பார்த்து ரசிக்கும் நடிகர்களின் பிறந்தநாளுக்கு போஸ்டர், பேனர், என செலவிடாமல் இப்படி பலருக்கும் உதவும்படியான செயல்களை செய்வது நல்லது என ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர் ரத்த தான முகாமின் போது கூறினார்.