இந்தியா அரசால் சிறந்த படம், இயக்குனர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு பிரிவுகளில் 1954-ஆம் ஆண்டு முதல் இந்தியா அளவில் சிறந்த படைப்பிற்கு தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி என அனைத்து மொழிகளில் வெளியாகும் படங்களை கொண்டு சிறந்த படைப்புக்கு தேசிய விருது அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழில் சிறந்த படம், நடிகர், இயக்குனர் என பல படைப்புகளுக்கு பெற்றுள்ளனர். 1971-ல் ரிக்ஷாக்காரன் படத்திற்காக எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
கமல் ஹாசன் அவர்களுக்கு 1982-ல் வெளியான “மூன்றாம் பிறை” படத்திற்கும், 1987-ல் வெளியான “நாயகன்” படத்திற்கும், 1996-ல் வெளியான “இந்தியன்” படத்திற்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். தமிழில் நடிகருக்கான தேசிய விருதை அதிக முறை வாங்கியவர் கமல்.
பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு 1997- ல் வெளியான “இருவர்” படத்திற்கு துணை நடிகராக தேசிய விருதை பெற்றார். பின்னர் 2007-ல் வெளியான “காஞ்சிவரம்” படத்திற்கும் சிறந்த நடிகருக்கான வித்துறை பெற்றார்.
2003-ல் பாலா இயக்கத்தில் வெளியான “பிதாமகன்” படத்திற்கு சிறந்த நடிகராக விக்ரம்க்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
தனுஷ் நடிப்பில் 2010-ல் வெளியான “ஆடுகளம்” படத்திற்கும், 2019-ல் வெளியான “அசுரன்” படத்திற்கும் என இரண்டு முறை தேசிய விருதை பெற்றார்.
2020-ல் வெளியான “சூரரை போற்று” படத்திற்கு சூர்யாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
2019-ல் “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் துணை நடிகருக்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.
இதுவரை இந்தியா சினிமாவில் அமிதாப் பச்சன் அவர்கள் 4 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். கமல், மம்முட்டி, அஜய் தேவ், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் மூன்று முறை சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளனர். மோகன்லால், தனுஷ் ஆகியோர் இரண்டு முறை பெற்றுள்ளனர்.