அனிருத் இசையில் ‘இந்தியன் -2’ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜூன் 1-ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் ‘’பாரா’’, ‘’நீலோற்பம்’’ என இரண்டு பாடல்களையும் பாடியிருப்பவர் ஸ்ருதிகா சம்ருத்ரலா. இவர்தான் அடுத்த ஷ்ரேயா கோஷல் என உருகிறார்கள் இசை ரசிகர்கள்!
ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்ருதிகா 2022-ம் ஆண்டு ஜீ தெலுங்கு சேனலில் ஒளிபரப்பான ‘சரிகமப சீசன் 14′ டிவி ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளர். இந்த சீசன் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது பல லட்சம் ரசிகர்கள் இவருக்கு வாக்குகள் அளித்து யாராலும் நெருங்கமுடியாத வெற்றியை தந்தார்கள். கல்லூரி மாணவியான ஸ்ருதிகாவின் வயது 20.
ஒரு பாடல் பாடம்போது அதன் உணர்வுகள் குரலின் வழியே கடத்தப்படுவதுதான் சிறந்த பாடகருக்கான தகுதி. அந்தவகையில் ஸ்ருதிகாவின் குரல் பலவிதமான தனித்துவமான உணர்வுகளைக் கடத்துவது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் அந்தப்பாடலில் எதிர்பார்ப்பும் எமோஷன்களைப் புரிந்துகொண்டு அதைத்தன்னுடைய திறமையின் வழியே தனித்துவமாகக் கடத்துவதில் வல்லவராக இருக்கிறார் ஸ்ருதிகா.
![அனிருத் இசையில் அசத்தும் புதுப்பாடகி ஸ்ருதிகா சம்ருத்ரலா! 2 ஸ்ருதிகா சம்ருத்ரலா](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/376786031_826027019160368_1400378495181381704_n-819x1024.jpg)
ஸ்ருதிகாவின் குரல்மொழி மற்றும் உச்சரிப்பு பாடலின் தன்மையை மெருகேற்றுவதோடு, பாடலின் தரத்தையும் மேம்படுத்துகிறது. ஸ்ருதிகாவின் தெளிவான உச்சரிப்பு பாடல் வரிகள் கேட்கப்படுவதை மட்டுமல்ல, உணரப்படுவதையும் உறுதி செய்கிறது. மேலும் அவரது குரல் பாடலின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கவைக்கிறது. இதை நேற்று வெளியான “நீலோற்பம்” பாடலில் தெளிவாக உணரமுடியும். இந்தப்பாடலில் ஸ்ருதிகாவின் துல்லியமான உச்சரிப்பு தாமரையின் வரிகளுக்கு அழகயையும், முழுமையையும் சேர்க்கிறது.
ஒவ்வொரு பாடலின் தீம் அதாவது தன்மைக்கு ஏற்ப தனது குரலை மாற்றியமைக்கும் உள்ளார்ந்த திறமையை ஸ்ருதிகா பெற்றிருக்கிறார் என்பது அவரது பாடல்களைக் கேட்கும்போது புரிகிறது. இதுதான் ஷ்ரேயா கோஷலின் பலமாகப் பார்க்கப்பட்டது. ‘’பாரா’’ பாடலில், ஒரு வீரனின் வலிமை மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வலுவான, எதிரொலிக்கும் குரலில் பாடி அசத்தியிருந்த ஸ்ருதிகா, ‘நீலோற்பம்’ பாடலில் மென்மையான, உள்ளார்ந்த உணர்வுகளைக் கடத்தும் வகையில் பாடி அசத்தியிருக்கிறார்.
இனிவரும் காலம் இசையுலகில் ஸ்ருதிகாவின் காலமாக இருக்கும்!