பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி திருவோத்து நடித்துள்ள படம் ‘தங்கலான்’. வழக்கமான ரஞ்சித் படம் போல இல்லாமல் சாதி பற்றிய படமாக இல்லாமல் ஒரு புது முயற்சியாக கோலார் தங்க வயல் சார்ந்த கதையாக உள்ளது.
தற்போதைய கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் உருவாகுவதற்கு முன் நடக்கும் கதையாக தெரிகிறது . அதில் பல தடங்கல்கள், அந்த ஊரில் உள்ள மக்களின் எண்ணம், எப்படி ஆங்கிலேயர்களின் கீழ் தங்க சுரங்கம் வெட்டப்பட்டது என்பதை கூறும் படம்.
டிரெய்லரில் நடிகர்கள் சியான் விக்ரம், பார்வதி திருவோத்து மற்றும் மாளவிகா மோகனன் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளனர். அதிரடியான சண்டை காட்சிகளும், கிராஃபிக்ஸ் நுட்பமும் டிரெய்லரை தூக்கி நிறுத்துகிறது.
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படம் 1060 வருடங்களுக்கு முன் நடக்கும் கதை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் கூறினார். கோலார் தங்க வயல் பற்றி ஏற்கனவே வந்த K.G.F படம் ஒரு Pan India படமாக அமைந்ததை அடுத்து ‘தங்கலான்’ படமும் அந்த வழியில் தொடருமா என்பதை படம் வெளியாகும்போது தெரியவரும். இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை, எதாவது பெரிய படத்துடன் 2024ன் இரண்டாம் பாதியில் மோதும் என்று தான் பேசப்படுகிறது.