‘வாழை‘ படத்தின் கதை இயக்குனர் மாரி செல்வராஜின் நிஜ வாழ்க்கையின் முக்கிய பகுதிகளின் கதை. இந்த படத்தை மிக நுணுக்கமாக கையாண்டு வரும் இயக்குனர் மாரி செல்வராஜ், தற்போது நான்காவது பாடலை எழுதி வெளியிட்டுள்ளார்.
‘பாதவத்தி’ என்ற ஒப்பாரி பாடலை மிக உருக்கமாக எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையில் பாடகர் ஜெயமூர்த்தி மற்றும் பாடகி மீனாட்சி இளையராஜா குரலில் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலின் தொடக்கத்தில், ‘பாதவத்தி’ என்ற சொல்லின் அர்த்தத்தை ஒரு சிறு கவிதையாக எழுதி விளக்கியுள்ளார்கள்.
இதுவரை வெளியான பாடல்களிலும் தொடக்கத்தில் ஒரு உருக்கமான சின்ன கவிதை இடம்பெற்று, அதன் பிறகே பாடல் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் மாறி செல்வராஜ். இந்த பாடலின் கவிதையை பாப்பா செல்வராஜ் எழுதியுள்ளார். இதற்கு முன் இயக்குனர் மாரி செல்வராஜ் இயற்றிய கவிதைகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
‘வாழை’ பட விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் உருக்கமான பேச்சு
இந்த ஒப்பாரி பாடல் ‘வாழை’ படத்தின் முக்கிய அம்சமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் கடினமாக உழைத்துள்ளார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் இயக்குனர். அதனால் ஒரு உருக்கமான காட்சியை இந்த பாடல் மேம்படுத்தும் என்று நம்பலாம். ‘Vaazhai’ படம் ஆகஸ்ட் மதம் 23ம் தேதி வெளியாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.