‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து மாரி செல்வராஜ், ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களை இயக்கினார். அடுத்ததாக ‘பைசன்’ மற்றும் ‘வாழை’ படங்களை இயக்கிவருகிறார்.
நவ்வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கலையரசன், நடிகை நிகிலா விமல், நடிகை திவ்யா துரை ஆகியோர் நடிக்கும் படம் ‘Vaazhai’. இந்த படத்தின் அறிவிப்பு இந்தாண்டின் தொடக்கத்தில் வந்தது. படத்தின் போஸ்டர்கள் பார்ப்பதற்கு இயற்கை கொஞ்சும் அழகோடு இருப்பதால், படம் ஒரு கிராமத்து களத்தில் எடுக்கப்படும் என தெரிகிறது.
பள்ளியில் படிக்கும்போது அவர் வாழ்வில் நடந்த உண்மையானச் சம்பவத்தை, சினிமாவுக்கான எந்த போலித்தனங்களும் இல்லாமல் மிகவும் உண்மையாகப் படமாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆகஸ்டு மாதம் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. ‘Vaazhai’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் ‘வாழை’ படத்திற்கு மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அவரின் அடுத்த இரண்டு படங்களும் அப்படியே தொடரும் என்றளவுக்கு இரண்டு படங்களும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.