இயக்குநர் Vetrimaaran ‘அசுரன்‘ படத்தை முடித்ததும் சூர்யாவின் ‘வாடிவாசல்’, அடுத்து விஜய் படம் என லைன் அப் வைத்திருந்தார். ஆனால், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ படங்களின் தயாரிப்பாளரான எல்ரெட் குமாரிடம் பல வருடங்களுக்கு முன்பு இரண்டு படம் இயக்கித்தருவதாக அட்வான்ஸ் தொகை வாங்கியிருந்தார் எல்ரெட் குமார்.
அவர் திடீரென ‘அசுரன்’ படம் முடிந்ததும் தனக்கு ஒப்பந்தம் போட்டபடி இரண்டு படங்கள் இயக்கி முடித்துவிட்டுத்தான் ‘வாடிவாசல்’ படத்துக்குப்போக வேண்டும் என நெருக்கடி கொடுக்க, ‘விடுதலை’ படத்தையே 2 பாகங்களாக இயக்குவது என முடிவெடுத்தார் Vetrimaaran.
கடந்த ஆண்டு விடுதலை-1 ரிலீஸ் ஆகி பெரிய வெற்றிப்படமாக மாறவில்லை என்றாலும் வெற்றிமாறனின் பெயரை ஓரளவு காப்பாற்றியது. முதலில் இதில் சூரி மட்டுமே நடிப்பதாக இருந்தது. ஆனால், பட வியாபாரத்துக்காகப்பின்னர் விஜய் சேதுபதி சேர்க்கப்பட்டார். அவருக்காக காட்சிகள் அதிகம் எடுக்கப்பட்டன. விடுதலை – 1 எடுக்கும்போதே விடுதலை 2-வுக்கான பல காட்சிகளும் படமாக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தோடு விடுதலை 2 படத்தை இப்போது இயக்கி முடித்துவிட்டார் வெற்றிமாறன். இதை சில குறிப்பிட்ட ஃபிலிம் ஃபெஸ்ட்டிவல்களுக்கு அனுப்பியிருந்தார். ஆனால், அங்கிருந்தெல்லாம் ரியாக்ஷன் நெகட்டிவாக வர, தன்னுடைய பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்காக மீண்டும் ரீ-ஷூட் செய்திருக்கிறார் Vetrimaaran.
படம் ரீ ஷூட் செய்யப்படுவது மட்டுமல்லாமல் புதிதாக ஒரு கேரெக்டரையும் இணைத்திருக்கிறார் வெற்றிமாறன். அந்தப்புதிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். படத்தின் ரீஷூட் தென்காசியில் நடந்துமுடிந்திருக்கிறது. தற்போது சென்னையில் இருக்கும் வெற்றிமாறன் மீண்டும் படத்தை எடிட் செய்துபார்த்துவிட்டு அதற்கு ஏற்றார்போல மீண்டும் எதாவது காட்சிகள் ரீஷூட் செய்யப்படுமா என்பது குறித்து முடிவு செய்வார் என்கிறார்கள் இயக்குநருக்கு நெருக்கமானவர்கள்.