தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்குமார். தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாக உள்ளது.
மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சம்பள பாக்கி காரணமாக ‘விடாமுயற்சி’ பட ஷூட்டிங்கிற்கு அஜித் வரமாட்டேன் என்று அதிர்ச்சி கொடுத்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இதன் காரணமாக விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் நடக்காமல் இருந்து வரும் நிலையில் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் இது குறித்த விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா அவர்கள் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது Vidaamuyarchi திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என உறுதி செய்துள்ளார். இவருடைய இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அப்போ இந்த வருஷம் தல தீபாவளி கன்ஃபார்ம் என கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.