ஆகஸ்ட் 2ம் தேதி வெளியான படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. நடிங்கர் விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் நடித்து வெளியான இந்த படத்தை விஜய் மில்டன் எழுதி, இயக்கியுள்ளார். இந்த படத்தில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து இயக்குனர் விஜய் மில்டன் அதிர்ச்சியான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
முதல் காட்சியை பார்த்த இயக்குனர் விஜய் மில்டன் அவரின் அனுமதி இல்லாமல் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் தொடக்கத்தில் ஒரு 5 நிமிடத்திற்கு காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த காட்சிகளால் அவர் எழுதிய ஒரிஜினல் கதையில் உள்ள சுவாரசியம் குறைந்துவிட்டதாகவும், flashback காட்சிகளை எனக்கு தெரியாமல் யாரோ சேர்த்துள்ளார் என்றும் அவர் புலம்பி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் விஜய்மில்டனுக்கு இப்படி ஒரு அநீதியா?
— Valaipechu J Bismi (@jbismi_offl) August 2, 2024
@vijaymilton @vijayantony pic.twitter.com/IitVbE2FeY
படத்தின் தொடக்கத்தில் விஜய் ஆண்டனியின் பாத்திரத்தின் பின்கதையும், அவர் ஏன் படம் முழுதும் மழை பிடிக்காமல், உருக்கமாக இருக்கிறார் என்றதை தெளிவாக்கும் காட்சிகள் ஒரு அனிமேஷன் காட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது. “இதை தான் படத்தில் எழுதவில்லை” என்றும் “தயவுசெய்து படம் பார்க்க வரும் மக்கள் இந்த முதல் காட்சியை மறந்துவிட்டு படத்தை பாருங்கள்” என்றும் இயக்குனர் விஜய் மில்டன் இந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
முதல் நாள் காட்சியிலேயே இப்படி இயக்குனர் புலம்பி குற்றச்சாட்டை வைத்துள்ளது சினிமா ரசிகர்களிடையே பார்ப்பப்பை ஏற்படுத்தியுள்ளது. இது படத்தை ப்ரோமொட் செய்ய செய்யப்படும் மார்க்கெட்டிங் திட்டமா? என்ற கேள்விகளும் மக்கள் கேட்க, அந்த காட்சிகளை நீக்க ஏதும் திட்டம் உள்ளதா என்பதை இயக்குனர் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
— vijayantony (@vijayantony) August 5, 2024
இதற்கிடையில் இந்த காட்சிகளை சேர்த்தது படத்தின் தயாரிப்பாளர்கள் என்றும் படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியும் இதில் சம்பத்தப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று நடிகர் விஜய் ஆண்டனி “அது நான் இல்லை” என்று ஒரு பதிவை தன்னுடைய X தளத்தில் பகிர்ந்துள்ளார்.