நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கோயம்பேட்டில் உள்ள தெ மு தி க கட்சி அலுவலகத்தில் அவரின் நினைவாக திருவுருவச்சிலை திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு பல்லாயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு அந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கருதினர்.
தன்னுடைய வாழ்நாளில் பல பேருக்கு உணவளித்தவர் விஜயகாந்த். அவரின் கொள்கையை அவர் மறைந்த பின்னரும் இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 25 லட்சம் பேருக்கு உணவளிதுள்ளனர். இவர்களின் கட்சி சார்பில் டெல்லி தமிழ் சங்கத்திற்கு 1 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. சிலை திறப்பிற்கு முன்னரும் தே மு தி க கட்சி அலுவலகத்தில் உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பழங்குடியின மக்களுக்கு இருசக்கர வாகனங்களும் கட்சி சார்பில் வழங்கப்பட்டது.
கேப்டன் விஜயகாந்த் உடைய சிலையை இந்த கட்சியில் பொது செயலாளர் பிரேமலதா திறந்துவைக்க, கட்சியில் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நடிகர் விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் இருவரும் ரசிகர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்கள் உடன் இதில் பங்கேற்றனர். சிலை திறப்பு முடிந்ததும் கூட்ட நெரிசல் காரணமாக விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் மயக்கப்போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் அதிகாரியாக அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த Vijayakanth-ன் படங்கள்
விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் நினைவாக ‘கேப்டன் ஆலயம்’ என்ற யூடியூப் சேனலையும் அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தொடக்கி அதன் லோகோவையும் வெளியிட்டார்.