Home Cinema News ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. 

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. 

ராம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது. 

by Vinodhini Kumar

இயக்குனர் ராம், நடிகர் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலியை வைத்து இயக்கியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இந்த படம் ஏற்கனவே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

ஏழு கடல் ஏழு மலை poster

ஒரு ரயில் பயணத்தில் சாதாரண மனிதர், 8000 ஆண்டுகள் வயதான சாவில்லா மனிதன் மற்றும் ஒரு எலிக்கு நடுவில் நடக்கும் கதை தான் ‘ஏழு கடல் ஏழு மலை’. படத்தின் போஸ்டர் மற்றும் சிறு வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, V புரொடக்சன்ஸ் கீழ் தயாரிக்கிறார். இயக்குனர் ராம் எழுதி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க பிப்ரவர் 14, 2024ல் நடிகர் சித்தார்த் குரலில் ‘மறுபடி நீ’ பாடல் வெளியானது. 

இதையடுத்து இன்று யுவன் இசையில் முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் பாடி ஒரு பாடல் வெளியாகி பேசு பொருளாக உள்ளது. இந்த பாடலை கவிஞர் மதன் கார்க்கி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.