Ethirneechal’லின் நேற்றைய எபிசோடில் குணசேகரனின் தம்பியான ஞானசேகரன் கரிகாலனை சந்தித்து பேசிவிட்டு வீட்டுக்கு வர என்ன நடக்கப்போகிறது என்கிற பரபரப்பே இன்றைய எபிசோட். குணசேகரன் வீட்டின் மூன்றாவது மருமகளான நந்தினி குணசேகரன் பற்றி பேச ஈஸ்வரி அவரிடம் இருந்து சட்ட ரீதியாக விலகப் போகிறேன் என்று முடிவெடுத்திருப்பதாக சொல்கிறாள். இதைக்கேட்டு எல்லோரும் அதிர்ச்சியடைகிறார்கள்.
இதற்கிடையே கரிகாலனை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஞானம் எல்லாரையும் கூட்டி வைத்து நாளைக்கு கடை திறக்கப் போவதாக சொல்ல அவரது மனைவியான ரேணுகா கடை திறக்க போறோமா என்று அதிர்ச்சியாகிறாள்.
இந்த விஷயத்தை கேட்டு அனைவரும் சந்தோஷப்பட மேலே ஜன்னல் வழியாக கீழே நடப்பது அனைத்தையும் பார்க்கும் குணசேகரன் விமர்சனத்தோடு சிரித்துக் கொண்டிருக்கிறார். கரிகாலனை நம்பி ஞானம் ஏமாற இருப்பதுபோன்ற சிரிப்பு அவரது உடல்மொழியில் தெரிகிறது.
ஜனனி நாம எடுத்து வச்ச முதல் ஸ்டெப்ல ஞானத்துக்கு வெற்றி கிடைச்சிருக்குனா அது எல்லாருக்கும் சந்தோஷம்தானே என்று சொல்கிறாள். ஞானம் குணசேகரனை பார்த்து ஜெயித்த சந்தோசத்தில் சிரிக்கிறான். இப்படியாக இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.