தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி சீரியல் ஆக இருக்கும் “Baakiyalakshmi”யில் மிகப்பெரிய திருப்பம் அமையப்போகும் விதமான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. இத்தொடரில் தாத்தாவாக நடித்து வரும் S.T.P. ரோசரியின் கதாபாத்திரம் ராமமூர்த்தி முடிவுக்கு வருகிறது. இந்த ப்ரோமோவால் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த நான்கு வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி. இதில் பாக்கியலட்சுமி, ஈஸ்வரி, கோபிநாத், ராமமூர்த்தி, எழில் என முக்கிய கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றிருக்கிறது. எழில் கதாபாத்திரம் சில நாட்களுக்கு முன் மாற்றம் செய்யப்பட்டு பல அதிருப்திகள் உருவான நிலையில் தற்போது ராமமூர்த்தியின் இறுதி நிமிடங்கள் என்ற ப்ரோமோவால் இன்னும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கதையில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ப்ரோமோ இத்தொடரின் மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது. ராமமூர்த்தியின் மரணத்தின் பிறகு கதையில் எந்த ஒரு திருப்பமும் வர வாய்ப்பு இல்லை என்றாலும், எழில் அல்லது கோபி தனது குடும்பத்துடன் ஒன்று சேர வாய்ப்புள்ளது என பரவலாக பேசப்படுகிறது. இல்லையென்றால் கதை சற்று வளர்ந்து தனது அப்பா கோபியுடன் இணக்கமாகவும் வாய்ப்புகளும் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.