Home Serial நீங்க குழந்தை பெத்துக்க போறீங்களா டாடி? கோபியை திணற விட்ட இனியா… ‘Baakiyalakshmi’ இன்றைய எபிசோட்!

நீங்க குழந்தை பெத்துக்க போறீங்களா டாடி? கோபியை திணற விட்ட இனியா… ‘Baakiyalakshmi’ இன்றைய எபிசோட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில்(03-05-2024) நடக்க போவது என்ன?

by Santhiya Lakshmi

கோபியும் இனியாவும் ஷாப்பிங் முடித்துவிட்டு ரெஸ்டாரண்ட வந்திருக்க இனியா கேக் சாப்பிட்டுக் கொண்டிருக்க, இனியா கோபியிடம் திடீரென ”நீங்க குழந்தை பெத்துக்க போறீங்களா டாடி” என்று கேட்க கோபி ஷாக் ஆகிறான். ”ஏண்டா இப்படி கேக்குற” என்று கோபி கேட்க ”இல்ல கார்ல வரும்போது குழந்தையை பத்தி பேசனீங்களே… அதனால கேக்குறேன்” என்று சொல்ல ”அது சும்மா கேட்டேன்” என்று சமாளிக்கும் கோபி ”ஒருவேளை குழந்தை பெத்துக்கிட்டா உனக்கு எப்படி இருக்கும்” என்று கேட்க ”அது எப்படி முடியும் உங்களால் எப்படி குழந்தை பெத்துக்கமுடியும்… அப்படி பெத்துக்கிட்டா அது சாதனைதான்” என்று கலாய்க்கிறாள். ”குட் ஜோக்” என்று சிரித்து சமாளிக்கிறான் கோபி.

WhatsApp Image 2024 05 03 at 6.27.04 AM 2

கோபி ஒரு போன் கால் பேச வெளியேவர திடீரென அங்கு வரும் விமல் இனியாவை பார்த்து அவளிடம் பேசிக் கொண்டிருக்க ”நீங்க பழனிச்சாமியோட சொந்தக்காரர் என்பது என் அப்பாவுக்கு தெரிய வேண்டாம்” என்று இனியா சொல்கிறாள். ”நான் எதையும் சொல்ல மாட்டேன்” என்று விமல் சொல்லிக் கொண்டிருக்க கோபி அங்கு வந்து விட விமல பார்த்து ”யாருடா நீ” என்று சட்டையை பிடித்து சத்தம் போடுகிறார். 

விமல் கோபியிடம் ”டாடி… நான் இனியாவோட பிரண்டுதான்… கையை விடுங்க” என்கிறான். ”டாடியா யாருக்கு யாரு டாடி” என்று கோபி கடுப்பாக விமல் அப்பா என்று சொல்ல திரும்பவும் கடுப்பாகிறான். அது மட்டும் இல்லாமல் மாமானு கூப்பிட கோபி இன்னும் காண்டாக ”எங்க ஊர்ல எல்லாம் அங்கிள்னு கூப்பிட மாட்டோம் மாமானு தான் சொல்லுவோம்” என்று சொல்கிறாள். 

கோபி ”எந்த ஊர் காரன்டா நீ” என்று விசாரிக்க விமல் கோயம்புத்தூர் காரன் என்று சொல்ல அங்க இல்லாத காலேஜா இங்கே இருக்கு என்று கேள்வி கேட்கிறான். இனிமே உன்ன பாக்கவே கூடாது போடா என்று துரத்திவிட்டு அவனிடம் பேசாத என்று இனியாவுக்கு அட்வைஸ் செய்கிறான்.

அடுத்ததாக வீட்டில் எழில் குழந்தைக்கு பெயர் வைக்க வீட்டை அலங்கரிப்பதற்காக எல்லா பொருட்களையும் வாங்கி வர எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பலூனை கட்டி டெக்கரேட் செய்ய குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று பேச்சு வருகிறது. இனியா சில பெயர்களை சொல்ல செழியன் ராகினி என்ற பெயரை சொல்ல ஈஸ்வரி ”குழந்தைக்கு நான்தான் பெயர் வைப்பேன், எல்லாருக்கும் பிடித்த மாதிரி நல்ல தமிழ் பெயராக தான் வைப்பேன்” என்று சொல்கிறாள். 

இதையடுத்து ரூமுக்குள் வந்த ஜெனி மாலினி ராகினி இரண்டும் ஒரே மாதிரி இருந்ததால்தான் அந்த பேர சொன்னியா என்று கேட்டு செழியனை அதிர வைக்கிறாள்.செழியன் சத்தியமா நான் அப்படி யோசிக்கல என்று பதறுகிறான். 

மறுபக்கம் அமிர்தா எனக்கும் குழந்தை பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு என்று சொல்ல எழில் கண்டிப்பா நடக்கும், அதற்கு ஒரு நாள் வரும் என்று சொல்ல அமிர்தா எப்போது என்று கேட்கிறாள். அதுல சில சிக்கல் எல்லாம் இருக்கு என்று எழில் சொல்கிறான். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.